ஈரோடு.. பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு
ஈரோடு: ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Recommended Video

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீபதி அசோசியேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. ஸ்ரீபதி பெயரில் ரியல் எஸ்டேட், பஸ் டிரான்ஸ்போர்ட், கட்டுமானம், திருமண மண்டபம், கரூரில் கல் குவாரி, மசாலா நிறுவனம், கட்டுமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.

மேலும் அரசு துறை அலுவலகங்கள், மருத்துவ கல்லுாரிகள், பாலங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டுமான பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு தங்க பெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட காரில் வந்த கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 35 பேர் வரி ஏய்ப்பு தொடர்பாக நேற்று நள்ளிரவு முதல் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே சமயத்தில் ரெய்டு நடந்து வருகிறது. இதுவரை ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications