"புயல்ங்க" ஈரோட்டில்.. தீப்பொறியாய் பிரச்சாரம்.. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு 27-ந்தேதி விடுமுறை
இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் 27-ந்தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் 27-ந்தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது... இன்னும் தேர்தலுக்கு 13 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் ஈரோடு கிழக்கில் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி அறிவிப்பு
திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் அதாவது 15, 16, 167 மற்றும் 24, 26 தேததிகளில் பிரச்சார வேனில் வீதி வீதியாக சென்று தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். உதயநிதி ஸ்டாலினும், வரும் 19 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் 19ம் தேதி பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

விஜயபாஸ்கர்
தலைவர்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், தற்போது, அமைச்சர்கள் முத்துசாமி, கேஎன் நேரு, எவ வேலு, சாமிநாதன், பெரியசாமி, செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல, அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் களமிறங்கி உள்ளனர்... அதிமுகவில் செங்கோட்டையன், கேவி ராமலிங்கம், கருப்பணன், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செல்லூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேனகா நவநீதன்
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி முருகானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்... தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.. காலை 6 மணிக்கு வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தை தொடங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் 10 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, தேர்தல் பணிமனையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

சுழற்சி முறையில்
மதிய உணவுக்கு பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்கச் செல்லும் தலைவர்கள் மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி, 10 மணி வரை பிரச்சாரத்தை தொடர்கின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதுமே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன... தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய தேர்தல் கமிஷன்
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் 27-ந்தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே 27-ந்தேதியை பொதுவிடுமுறையாக அரசு அறிவிக்கிறது. அதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பிறப்பித்துள்ளார்.

விடுமுறை
27-ந்தேதி விடுமுறை அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் வாக்காளர்களுக்கும் (ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும்) 27-ந்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications