'நாகா’ மக்கள் என் உறவினர்கள்- நாய் கறி தின்னா என்ன? அகோரி மனித கறி திங்குறானே.. போங்கடா.. சீமான்
ஈரோடு: நாகாலாந்து மக்கள் நாய் கறியை உணவாக உட்கொள்வது அவர்களது உரிமை; மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகளை சிறையில் அடைத்து விடுவீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது அருந்ததியரை ஆந்திரா வந்தேறிகள் என விமர்சனம் செய்தார் சீமான். இது தொடர்பான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு சீமான் ஆஜரானார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நாய்கறி சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் அளித்த பதில்: அருந்ததியர் குறித்து நான் பேசியது வரலாற்றைதான். வரலாற்று பக்கங்களை படித்தவன். அதனால் அப்படி பேசினேன்.
பேயை கூட தின்பேன்: உணவு, உடை, வழிபாடு என்பது அவரவர் உரிமை. நான் நாயை தின்பேன்.. பேயை தின்பேன்.. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நாகாலாந்து மக்கள்தான் நாய் தின்கின்றனரா? சீனாவில் சாப்பிடவில்லையா? மற்ற நாடுகளில் சாப்படவில்லையா? உணவு என்பது என் உரிமை.
என் உணவு என் உரிமை: இந்த நாட்டில் மாட்டுக் கறி சாப்பிடாதே... அந்த கறி சாப்பிடாதே.. பன்றி கறி சாப்பிடாதே என்கின்றனர்.. முதலில் என்னுடைய உணவு என்ன என்பதை உறுதி செய்யுங்க.. அதன் பிறகு பேசுங்க.. என் உணவு என்ன என்பதை உன்னால் உறுதி செய்ய முடியுமா? முடியாது என்கிற போது நான் எதை சாப்பிட்டால் உனக்கு என்ன?
அகோரிகளும் மனித மாமிசமும்: அகோரிகள் உயிருள்ள எதனையும் சாப்பிடக் கூடாது என்பவர்கள். காய்கறிகளை கூட சாப்பிடுவது இல்லை தெரியும் தானே? இறந்த மனித உடல் வெந்து கொண்டிருக்கும் போது அதை எடுத்து ரொட்டியில் வைத்து சாப்பிடுகின்றனர். அதை என்ன செய்வது? அந்த அகோரிகளை எல்லாம் உள்ளே போடுவீங்களா? அதை கேவலம் என பேசுவீங்களா? நான் கூட நாய் போனா, நாகாலாந்து பிரியாணி போகுது விடுடா என்பேன்.
என் சொந்தக்காரன்.. : நாகாலாந்தில் இருப்பவன் என் உறவினர்தான். நாங்க நாகர்கள்தானே.. நாகாலாந்துன்னு பெயர் எப்படி வந்தது? மண்ணின் பூர்வகுடிகள்.. அவன் விருப்பம்.. அவ என்னத்தையோ சாப்பிடுவான். காவிரியில் தண்ணீர் வராத போது நாங்க எலிக்கறி தின்னோம்.. அப்ப எங்க போன? பாம்புக்கறி தின்னுகிட்டு இருந்தப்ப எங்க போன? நான் நத்தை தின்பேன்.. நண்டு தின்பேன்.. உனக்கு விருப்பம்னா சாப்பிடு.. இல்லைன்னா அங்கிட்டு போடா.. வேலையை பாருடா... சும்மா அதை திங்காதே.. இதை திங்காதேன்னு.. இவ்வாறு சீமான் கூறினார்.
நாய்கறி சர்ச்சை ஏன்?: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, நாய்கறி சாப்பிடும் நாகலாந்துகாரர்களுக்கே சொரணை வந்து ஆளுநர் ரவியை விரட்டியடித்தனர்; சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் நாங்கள் சும்மா விடுவோமா? என கூறியிருந்தார். நாய்கறி சாப்பிடுபவர்கள் என நாகாலாந்து மக்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்திவிட்டார் என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாடு பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications