ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பேரம் பேசினார்களா? குழப்பிய நாதக வேட்பாளர் சீதாலட்சுமி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று திமுகவினர் யாரும் பேரம் பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வேறு யாரும் பேரம் பேசினார்களா என்ற கேள்விக்கு குழப்பமான பதிலை அளித்த சீதாலட்சுமி, திமுக உடனான போராட்டம் கருத்தியல் ரீதியிலானது என்றும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டது.
இதனால் இடைத்தேர்தலில் திமுக vs நாதக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு திமுக பிரமுகர் ஒருவர் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் பேரம் பேசியதாக சில பதிவுகள் வெளியாகியது. இதுகுறித்து நாதக வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக பிரமுகர் பேரம் பேசியதாக நான் எங்கும் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீங்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இதுதொடர்பாக குறுந்தகவல் அனுப்பியதாக சில தகவல் வந்துள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த விவகாரம் எனக்கும் சீமான் அண்ணனுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். திமுகவை தத்துவார்த்த ரீதியாக மட்டுமே எதிர்க்கிறேன்.
அதற்காக இங்குள்ள திமுகவினரை என்னால் வெறுக்க முடியாது. கருத்தியல் ரீதியாக எதிர்த்து போராடுகிறேன். வாட்ஸ் அப்பில் வந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல. என்னிடம் யாராவது பேரம் பேசினார்களா என்ற கேள்வியால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. இந்த கேள்வியை திமுகவினரை பார்த்து தான் கேட்க வேண்டும்.
திமுக வேட்பாளர் சந்திரகுமாரை பார்க்கும் போது அண்ணா.. வணக்கம் என்று சொல்வேன். என்னிடம் பேரம் பேசினார்களா என்றால், திமுக தரப்பில் என்னிடம் யாரும் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் என்னிடம் போட்டியிட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. போட்டியில் இருந்து விலகி கொள் என்றும் யாரும் சொன்னாலும், பணிய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. 3 விஷயங்கள் மட்டுமே இலவசமாக கொடுப்பேன்.. அடித்து சொன்ன சீமான்! -
ஆதவ் அர்ஜுனா? திருநங்கை ரோஷினி? கார்த்திக் மோகன்? வில்லிவாக்கம் தொகுதியில் முந்துவது யார்? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
Seeman: வாக்கு சதவிகிதம் முக்கியம் அல்ல.. சீமான் சட்டசபை போகணும்.. இலக்கை மாற்றிய நாம் தமிழர்!












Click it and Unblock the Notifications