Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிடம் "சரண்டர்" ஆன ஓபிஎஸ்? எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக! அடித்து சொன்ன "எக்ஸ்பர்ட்"

எடப்பாடி இந்த ஈரோடு தேர்தலில் அதிமுகவை கட்டுப்படுத்துவார். அவர் தோல்வி அடைந்தாலும் கட்சி அவரிடம் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பாஜகவிடம் ஓ பன்னீர்செல்வம் சரண்டர் ஆகிவிட்டார், அவர் அதிமுகவையும் பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறார். தினம் தினம் தனது செய்கைகள் மூலம் ஓ பன்னீர்செல்வம் இதை நிரூபிக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். முன்னதாக வேட்பாளரை அறிவித்த அவர் பாஜக வேட்பாளர் களமிறக்கினால் தனது தரப்பு போட்டியை வாபஸ் பெறுவதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் நாளுக்கு நாள் பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் நெருக்கம் ஆகி வருகிறார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த செயல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி

எடப்பாடி

அவர் அளித்த பேட்டியில், அதிமுகவில் நடப்பது எல்லாவற்றையும் ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவிடம் இப்படி அதிமுக பணிந்து போவதை இவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். பாஜகவிடம் மோத முடியவில்லை என்றால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவிடம் அடி பணியலாம். அவரிடம் சொந்தமாக கட்சி இருந்தால் அவர் கண்டிப்பாக பாஜகவிடம் அடி பணிந்து போகலாம். பாஜகவிடம் கட்சியை அடகு வைக்கலாம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை ஏன் அடகு வைக்க பார்க்கிறார். நான் போட்டியிடுவேன் . பாஜக இங்கே போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார்.

 ஓ பன்னீர்செல்வம் பேச்சு

ஓ பன்னீர்செல்வம் பேச்சு

அப்படி சொல்ல ஓ பன்னீர்செல்வத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? அது அதிமுக சின்னம் முன்பே நின்ற தொகுதி. இதற்கு முன்பே அங்கு அதிமுக வென்று இருக்கிறது. இந்த தொகுதியை ஓ பன்னீர்செல்வம் பாஜகவிற்கு தாரை வார்ப்பேன் என்று எப்படி கூற முடியும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்று கூறும் ஓபிஎஸ்.. . நான் போட்டியிடுவேன் . பாஜக இங்கே போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார். அவரின் பேச்சு சரியா.. அவர் பாஜக காலில் விழுந்துவிட்டார்.. சரண்டர் ஆகிவிட்டார் என்று எடப்பாடி தரப்பினர் வைக்கும் புகார்களை ஓ பன்னீர்செல்வம் தற்போது உண்மை என்று நிரூபித்து உள்ளார்.

நிரூபித்துவிட்டார்

நிரூபித்துவிட்டார்

தினம் தினம் தனது செய்கைகள் மூலம் ஓ பன்னீர்செல்வம் இதை நிரூபிக்கிறார். அதிமுகவில் தனக்கு ஆதரவு இல்லை என்பதால் ஓ பன்னீர்செல்வம் பாஜக நோக்கி நகர்கிறார். இதனால் அதிமுகவை விட்டு ரொம்ப தூரம் ஓ பன்னீர்செல்வம் தள்ளி போய்விட்டார். இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். கட்சி, தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார். அவருக்கு நான் சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் எடப்பாடி இருந்தால்தான் அதிமுக வலிமையாக இருக்கும். அதிமுக வலிமையாக இருந்தால்தான் தமிழ்நாடு அரசியல் நன்றாக இருக்கும். அவர்கள் மீது ஆயிரம் குறைகள் இருந்தாலும், அவர்களும் மதச்சாற்பற்ற கட்சிதான் என்பதை மறக்க வேண்டாம்.

அதிமுக அவசியம்

அதிமுக அவசியம்

அதிமுக துடிப்புடன் இருப்பது அவசியம். அதை எடப்பாடி செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் அப்படியில்லை. அவர் பாஜகவை சார்ந்து நிற்கிறார். அவர் செய்வது தவறு.. ஓ பன்னீர்செல்வம் செல்லாக்காசு ஆகிவிட்டார். எடப்பாடி இந்த ஈரோடு தேர்தலில் அதிமுகவை கட்டுப்படுத்துவார். அவர் தோல்வி அடைந்தாலும் கட்சி அவரிடம் இருக்கும். இங்கே ஆளும் கட்சிதான் வெல்லும். ஆனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடிக்கு ஆதரவு பெருகும். பாஜகவை சார்ந்து இருந்த ஓ பன்னீர்செல்வம் படிப்படியாக காணாமல் போய்விடுவார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+