கீழே வாங்க.. கரைவேட்டியை பார்த்து.. ஆசையாக இறங்கிய அதிமுக வேட்பாளர்! சுத்து போட்ட ஓபிஎஸ் டீம்! பகீர்
அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பிரச்சாரத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே. எஸ் தென்னரசுவை வழிமறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது.
இவர்தான் தற்போது அதிமுகவின் பொதுவேட்பாளர். இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

பிரச்சாரம்
தற்போது கே. எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. தேர்தல் பணிகளை இவர்கள் யாரும் சரியாக செய்யவில்லை என்று எடப்பாடிக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களாக வெளிமாவட்டத்தை சேர்ந்த அதிமுக வி.ஐ.பி.நிர்வாகிகள் யாரும் தொகுதியில் இல்லை. இதனால் எடப்படியே அங்கு தீவிரமாக இறங்கி பிரச்சாரம் செய்கிறார்.

கே. எஸ் தென்னரசு
இன்னொரு பக்கம் தென்னரசுவும் நேரடியாக இறங்கி பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று தென்னரசு வாகனம் ஒன்றில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே அதிமுக நிர்வாகிகள் பலர் சாலையில் நின்றனர். இவர்களை பார்த்த தென்னரசு வணக்கம் வைத்தார். அப்போது தென்னரசுவை கீழே இறங்கி வரும்படி அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். கீழே வாங்கண்ணே என்றதும்.. கரை வேட்டியை பார்த்து அதிமுக என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தென்னரசு கீழே இறங்கி வந்தார்.

என்ன நடந்தது?
ஆனால் அவர் கீழே இறங்கியதும்.. அங்கு நின்று இருந்தவர்கள்.. சட்டென தங்களை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். இதனால் தென்னரசு ஒரு கணம் திகைத்து போனார். கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் தென்னரசுவை சுத்து போட்டது போல அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் அவரிடம்.. தென்னரசு அண்ணே நீங்க வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களுக்கு நாங்கதான் வாழ்த்து சொல்லுவோம். ஆனா நீங்க ஓபிஎஸ் அண்ணே பெயரையே சொல்ல மாட்டறீங்க. தலைவர்கள் பெயர்ன்னு கூட்டணியில் உள்ளவங்க பெயர் எல்லாம் சொல்லுறீங்க.. ஓபிஎஸ் அண்ணே பெயரை சொல்லவில்லையே என்று கேட்டனர்.

தென்னரசு
இதை கேட்டு.. சரி சரி சொல்கிறேன் என்று கூறிவிட்டு தென்னரசு அங்கிருந்து நைசாக கிளம்பினார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார். இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய ஓ பன்னீர்செல்வம், பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது நான் தென்னரசுவிற்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தான் இன்னும் அதிமுகதான் என்பதை நிரூபிப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த திட்டத்தை போட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது களத்திற்கு செல்ல விருப்பம் இல்லாததால் இதுவரை அவர் பிரச்சாரம் எதையும் செய்யவில்லை.












Click it and Unblock the Notifications