Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குக்கர் வெடித்ததில் பரவிய கேஸ்..அடுப்பை பற்ற வைக்க முயன்ற மூதாட்டி தீப்பிடித்து பலி..ஈரோட்டில் சோகம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே சமையலறையில் கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் போது உடல் முழுவதும் தீப்பிடித்து மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேஸ் அடுப்பில் குக்கரை வைத்து அரிசியை போட்டுவிட்டு வழக்கம் போல் மற்ற வேலைகளை மூதாட்டி சுப்புலட்சுமி பார்த்து வந்துள்ளார். அப்போது திடீரென குக்கர் வெடித்து சிதறியுள்ளது. குக்கர் வெடித்து சிதறியதில் கேஸ் அடுப்பும் அணைந்து அதில் இருந்து எரிவாயு அறை முழுவதும் பரவியுள்ளது.

இதை அறியாத மூதாட்டி சுப்புலட்சுமி மீண்டும் கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றதால் அறையில் பரவியிருந்த எரிவாயுவினால் உடலில் தீப்பிடித்து பலியாகியுள்ளார்.

 வெடித்து சிதறிய குக்கர்

வெடித்து சிதறிய குக்கர்


ஈராடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே சாணார்பதி என்ற இடம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மூதாட்டி அங்கு பெட்டிக்கடையை நடத்தி வருகிறார். மூதாட்டி சுப்புலட்சுமியுடன் நடக்க முடியாத ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்ளும் மூதாட்டி சுப்புலட்சுமி இன்று வழக்கம் போல் தனது வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் குக்கரில் அரிசி போட்டு வைத்து விட்டு பிற வேலைகளை செய்துள்ளார். தீடிரென அடுப்பில் இருந்த குக்கர் வெடித்து சிதறியது.

மீண்டும் கேஸ் அடுப்பை பற்ற வைத்த மூதாட்டி

மீண்டும் கேஸ் அடுப்பை பற்ற வைத்த மூதாட்டி

சமையல் அறை முழுவது குக்கரில் இருந்த சாதம் விழுந்து சிதறியது. சமையல் அறையில் குக்கர் வெடித்த சத்தம் கேட்டதும் பதறிப்போன சுப்புலட்சுமி வேகமாக வந்து சமையல் அறைக்கு வந்துள்ளார். அப்போது குக்கர் வெடித்து சிதறியதால் எரிவாயு அடுப்பும் அணைந்து இருந்துள்ளது. குக்கர் வெடித்து சிதறியதால் அடுப்பு அணைந்துவிட்டதாக கருதி மீண்டும் சமையல் கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.

அலறி துடித்த மூதாட்டி

அலறி துடித்த மூதாட்டி

ஆனால், எரிவாயு கசிந்தது அறை முழுக்க எரிவாயு பரவியிருப்பதை மூதாட்டி கவனிக்கவில்லை. இதனால், அடுப்பை பற்ற வைக்க முயன்றதும் குப்பென்று பரவிய தீ அறை முழுக்க பற்றியுள்ளது. சமையல் அறையில் இருந்த மூதாட்டி சுப்புலட்சுமியின் சேலையில் தீ பிடித்தது. சேலையில் பிடித்த தீ சுதாரிப்பதற்குள் உடல் முழுவதும் பரவியது. இதனால், மூதாட்டி அலறி துடித்துள்ளர். மேலும் கத்தி கூச்சல் இட்டுள்ளார்.

 உடல் முழுவதும் தீப்பிடித்தது

உடல் முழுவதும் தீப்பிடித்தது


மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்து வீட்டினர். என்னமோ ஏதோ என்று பதறியடித்து வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீ பிடித்த நிலையில், சுப்புலட்சுமி அலறி துடித்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் உடனே தீயை அணைக்கும் முயற்சியாக தண்ணீரை ஊற்றியிருக்கின்றனர். தீ அணைந்தபிறகு சுப்புலட்சுமியை கவனித்த போது அவர் தீ பிடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

முன்னதாக வீட்டில் நடக்க முடியாத சூழலிலும் தவழ்ந்து தவழ்ந்து சென்று அவரது மகன் சுப்புலட்சுமியை காப்பாற்ற முயன்றது அங்கிருந்தவர்கள் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது கண் முன்னே தாய் சுப்புலட்சுமி தீப்பிடித்து சரிந்து விழுந்துள்ளார். இதற்கிடையே தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு கசிந்து தீப்பிடித்ததில் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+