பாலியல் டாக்டர் தந்த மாத்திரை.. எந்நேரமும் "டார்ச்சர்".. துடிதுடித்த மனைவி.. கடைசியில் நடந்த சம்பவம்

கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி கைதானார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பாலியல் டாக்டர் தந்த மாத்திரையால் பெரிய பயங்கரமே நடந்துவிட்டது.. ராத்திரி, பகல் என பார்க்காமல் எந்நேரமும் புது மனைவிக்கு டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார் கணவர்.. கடைசியில் மனைவி செய்த காரியம் இருக்கே.. அப்படியே அரண்டு போய்விட்டது அந்தியூர் பகுதி..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் சாலை தோட்டத்தை சேரந்தவர் நந்தகுமார்.. இவருக்கு 35 வயசாகிறது. இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது.. எனினும் ஒரு மாவு மில்லிலில் வேலை பார்த்து வந்தார்.

ஆனால், கல்யாணம் ஆகவில்லை.. 35 வயதாகிவிட்டதால் பெண் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை.. எனினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்.. அப்போதுதான் மைதிலி என்ற பெண் கிடைத்தார்-.. 7 மாசத்துக்கு முன்பு மைதிலியை கல்யாணமும் செய்து கொண்டார்.

உயிரிப்பு

உயிரிப்பு

இந்நிலையில், திடீரென வயிற்று வலி என்று நந்தகுமார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்.. என்ன ஆச்சு என்று டாக்டர்கள் கேட்கவும், தான் சாப்பிட்ட சாப்பாடு கசப்பாக இருந்தாகவும், ஏதோ பூச்சிமருந்து வாசனை வந்ததாகவும் சொன்னார்.. இதையடுத்து டாக்டர்கள் அவரக்கு தீவிரமான சிகிச்சை தந்தனர்.. ஆனாலும் நந்தகுமார் இறந்துவிட்டார்.. அவரை காப்பாற்ற முடியவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை ஆரம்பமானது.. ஒருவேளை நந்தகுமாரை யாராவது விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.. அப்போதுதான் மைதிலி மீது சந்தேகம் வலுத்தது.. அவரை மடக்கி விசாரித்தபோது மொத்த உண்மையையும் சொல்லி விட்டார்.

மைதிலி

மைதிலி

மைலிக்கு 15 வயதில் ஒரு கல்யாணம் ஆகி உள்ளது.. ஆனால், கணவரை பிரிந்துவிட்டார்.. இதன்பிறகுதான் நந்தகுமாரை 2வதாக மைதிலி கல்யாணம் செய்துள்ளார்..மைதிலிக்கு 20 வயசுதான் ஆகிறதாம். நந்தகுமாருக்கு 35 வயசாகிறது... 15 வருஷம் இவர்களுக்குள் வயது வித்தியாசம் இருந்துள்ளது.. இது மைதிலிக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்துள்ளது.. தாம்பத்தியத்திற்கு இடையூறாகவும் இந்த வயது பிரச்சனை இருந்திருக்கிறது..

 அவதி

அவதி

ஏற்கனவே 35 வயசு வரை கல்யாணம் ஆகாமல் தவித்த நந்தகுமார், மனைவி உறவுக்கு ஒத்துழைக்க மறுத்ததும், மேலும் நொந்து போய்விட்டார்.. அதனால், ஒருபாலியல் டாக்டரை சந்தித்துள்ளார் நந்தகுமார்.. அந்த டாக்டர் ஏதோ மாத்திரை தந்துள்ளார்.. அந்த மாத்திரையை மைதிலி சாப்பிட்ட பிறகு கர்ப்பமானாராம். ஆனால், இதற்கு பிறகுதான் பிரச்சனையே ஆரம்பமாகி உள்ளது.. மாத்திரை கையில் கிடைத்ததும், நந்தகுமார் மைதிலியை எந்நேரமும் பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.. ராத்திரி, பகல் என டார்ச்சர் தரவும் எரிச்சலாகிவிட்டார் கர்ப்பிணி மைதிலி..

 பூச்சி கொல்லி மருந்து

பூச்சி கொல்லி மருந்து

அதனால்தான், சாப்பிட்டில் விஷம் தந்து, ஆளையே க்ளோஸ் பண்ணிவிடலம் என்று முடிவெடுத்துள்ளார்.. சம்பவத்தன்று, வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பாட்டில் கலந்து நந்தகுமாருக்கு தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஒருவேளை அப்படி விஷ சாப்பாடு சாப்பிட்டும் நந்தகுமார் உயிர் போகவில்லையானால், என்ன செய்வதென்று யோசித்து, மதியம் சாப்பாட்டுக்கு கட்டி தந்த உணவிலும், விஷத்தை கலந்து தந்துள்ளார்.

விஷம்

விஷம்

அதனால், காலையில் சாப்பிட்ட விஷம், டிபன் பாக்ஸில் மதியம் சாப்பிட்ட விஷம் என மொத்தமாக நந்தகுமார் உடம்பில் கலந்துள்ளது.. அதனால்தான் சிகிச்சை எவ்வளவோ தந்தும் காப்பாற்ற முடியவில்லை.. இப்போது கர்ப்பிணி மைதிலி கைதாகி ஜெயிலுக்குள் இருக்கிறாராம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+