ஹாஸ்பிடலில் அப்பா! ஈவிகேஎஸ் இளங்கோவன் இடத்தில் இளைய மகன்! ஈரோட்டில் முகாமிட்டுள்ள சஞ்சய் சம்பத்!
ஈரோடு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவரது பிரதிநிதியாக ஈரோட்டில் முகாமிட்டு கட்சிப் பணிகளையும், தனது தந்தையின் மக்கள் பணிகளையும் கவனித்து வருகிறார் சஞ்சய் சம்பத்.
இதற்கு காரணம் தனது தந்தையை நம்பி வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சஞ்சய் சம்பத்தின் எண்ணமாகும்.
இன்று கூட ஈரோட்டிலிருந்து கேரள மாநிலம் வைக்கம் நோக்கி புறப்பட்ட வாகன பேரணியை கே.எஸ்.அழகிரியோடு சேர்ந்து சஞ்சய் சம்பத் தொடங்கி வைத்தார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் எதிர்பாராத ட்விஸ்டாக காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டிட்டு வெற்றியும் பெற்றார்.

மருத்துவமனையில் இளங்கோவன்
இவரது வெற்றிக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்த திமுகவும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு கடுமையாக உழைத்தது. இதனிடையே வெற்றி கொடுத்த மகிழ்ச்சி 15 நாட்கள் கூட நீடிக்கவில்லை. நெஞ்சு வலியாக அனுமதிக்கப்பட்ட இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இப்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் இளங்கோவன் மருத்துவமனையில் தான் இருந்து வருகிறார்.

ஈரோட்டில் சஞ்சய் சம்பத்
ஒரு வேளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவரால் உடனடியாக களத்திற்கு செல்ல முடியாது என்பது யதார்த்தம். இந்தச் சூழலில் அவரது பிரதிநிதியாக ஈரோட்டில் முகாமிட்டு கட்சிப் பணிகளையும், தனது தந்தையின் மக்கள் பணிகளையும் கவனித்து வருகிறார் சஞ்சய் சம்பத். இதற்கு காரணம் தனது தந்தையை நம்பி வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சஞ்சய் சம்பத்தின் எண்ணமாகும்.

போட்டியிட்டிருக்கலாம்
இதற்கு பேசாமல் சஞ்சய் சம்பத்தே ஈரோடு கிழக்கில் போட்டியிட்டிருக்கலாம். ஏனோ அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை, இளங்கோவனும் அதை வலியுறுத்தவில்லை. இதனிடையே இன்று கூட ஈரோட்டிலிருந்து கேரள மாநிலம் வைக்கம் நோக்கி புறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வாகன பேரணியை கே.எஸ்.அழகிரியோடு சேர்ந்து சஞ்சய் சம்பத் தொடங்கி வைத்தார்.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications