எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக வருவார்! செங்கோட்டையன் உறுதி!
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராவார் என செங்கோட்டையன் நம்பிக்கை.
ஈரோடு: 2026-ல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பழைய சினிமா பாடல் ஒன்றை மேற்கொள் காட்டிய செங்கோட்டையன், ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றிப்பெற போவது உறுதி எனக் கூறினார்.
இதனிடையே ஒரு காலத்தில் தனது சூப்பர் ஜூனியராக இருந்த எடப்பாடி பழனிசாமியை, இன்று நிரந்த முதலமைச்சர் என செங்கோட்டையன் கூறும் அளவுக்கு காலச்சக்கரம் சுழன்றிருப்பது கவனிக்கத்தக்கது.

அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை யாரும் எந்தப் பொறுப்புக்கும் வர முடியும் என்பது அக்கட்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் முத்துசாமி, செங்கோட்டையன் போன்றவர்களிடத்தில் அரசியல் பாலபாடம் பயின்ற எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக என்ற மிகப் பெரிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என பல உயரங்களை எட்டிப்பிடித்திருக்கிறார்.

நிரந்த முதல்வர்
இந்நிலையில் அரசியலில் காலச்சக்கரம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதற்கு உதாரணம் தான் இன்று செங்கோடையன் கூறியுள்ள ஒரு கருத்தாகும். அதாவது எடப்பாடி பழனிசாமி நிரந்தர முதலமைச்சராக 2026ல் பதவியேற்பார் என செங்கோட்டையன் கூறியிருக்கிறார். தாம் என்னதான் எம்.ஜி.ஆர்.காலத்து சீனியர் என்றாலும் நடப்பு அரசியலுக்கு அது கைகொடுக்காது என்பதால் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் செங்கோட்டையன்.

40க்கு 40 வெற்றி
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்துவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக மிகப் பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை எடப்பாடி பழனிசாமி என்று கூட கூறாமல் வார்த்தைக்கு வார்த்தை எடப்பாடியார் என்று மட்டுமே குறிப்பிட்டார்.

வாழ்வு வரும்
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பழைய சினிமா பாடல் ஒன்றை மேற்கொள் காட்டினார் செங்கோட்டையன்.
-
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
திட்டமிட்டபடி நாளை ஜூன் 4ம் தேதி தமிழக பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன் முக்கிய தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications