Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடைத்தேர்தல் நடக்கும் ஈரோட்டில் தகிக்கும் வெப்பம்..101 டிகிரி ஃபரான்ஹீட் பதிவு

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெப்பம் தகிக்கிறது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிகாலையில் குளிர் காற்று வீசினாலும் காலை 8 மணி முதலே சூரிய பகவான் தனது கதிர்வீச்சுக்களால் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகிறார். வெப்பத்தின் கொடுமை மாசி மாதமே தொடங்கி விட்டது. அனல் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க மக்கள் பழச்சாறு, தர்பூசணி உள்ளிட்ட குளிர்பானங்களை நாடத் தொடங்கி விட்டனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தின் இறுதியில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிடும். மே 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அந்த கால கட்டத்தில் அனல் காற்று வீசும். இந்த ஆண்டு பருவமழைகள் அபரிமிதமாக பெய்தாலும் குளிரும் அதிகமாகவே இருந்தது. பனியின் தாக்கத்தினால் கடந்த சில வாரங்களாகவே இருந்தது.

Summer begins in Tamil Nadu: 101 degree Fahrenheit record in Erode

தமிழ்நாட்டில் நிலவும் வறண்ட வானிலையால் வெப்பம் தகிக்கிறது. பல ஊர்களில் 95 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபரான்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால் ஏப்ரல் மே மாதங்களை எப்படி கடக்கப்போகிறோம் என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது. வெயிலில் இரு தப்பிக்க பலரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குசாவடிகளில் வாக்காளர்களுக்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Summer begins in Tamil Nadu: 101 degree Fahrenheit record in Erode

அவசிய தேவைகளுக்காக தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள் சாலை ஓரம் மரத்தடி நிழலில் இளைப்பாறி தர்பூசணிப்பழம் சாப்பிட்டு, இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு அருந்தி தாகத்தை தணிக்கின்றனர். வெயிலின் தாக்கத்தால் இப்போதே தர்பூசணி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வெப்பத்தை சமாளிக்க அரசு சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+