Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற.. அதிமுக வெற்றிபெற வேண்டும்.. அண்ணாமலை பிரச்சாரம்!

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிபெற்றால் மட்டும் திமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல், மக்களை அடைத்து வைப்பதால் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, பிப்.27ம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அண்ணாமலை பிரச்சாரம்

அண்ணாமலை பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேசுகையில், 30 திமுக அமைச்சர்களை எதிர்த்து தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இருண்ட காலம்

இருண்ட காலம்

அதிமுக வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுபோய்விடும் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் வாக்காளர்கள் ஒழித்து வைப்பதால், அதிமுக - பாஜகவின் கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது. திமுக ஆட்சியமைத்த 22 மாதங்கள், தமிழ்நாட்டின் இருண்ட காலமாக மாறியுள்ளது. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 கொடுத்திருந்தால், தற்போது ரூ.22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதேபோல் கேஸ் சிலிண்டர் மானியம் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு குக்கர் மட்டும் வந்துள்ளது. சாராய அமைச்சர் விற்காத கொலுசையும், வாங்காத குக்கரையும் மட்டும் தான் கொண்டு வருவார். அந்த குக்கரை வீடுகளில் பயன்படுத்தினால், அது நிச்சயம் வெடித்துவிடும்.

22 மாத திமுக ஆட்சி

22 மாத திமுக ஆட்சி

என்ன கொடுத்தாலும் பெற்றுக் கொண்டு ஓரமாக வைத்துவிட்டு, வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்க வேண்டும். கடந்த பொதுத்தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்தார். 22 மாத ஆட்சியில் ஒரு நல்ல விஷயம் கூட நடக்கவில்லை. அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றால் மட்டுமே, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மற்றும் கேஸ் மானியத்தை திமுக வழங்கும்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கட்சிகளை அடமானம் வைத்துவிட்டார்கள். நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதை பார்த்துவிட்டு, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களிடம் வாக்கு கேட்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ, கனிமொழிக்கோ எந்த தகுதியும் இல்லை என்று விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+