Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருமுட்டை விற்பனை விவகாரம்! பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் அனுமதி! பரபர ஈரோடு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

கருமுட்டை விற்பனை

கருமுட்டை விற்பனை

இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோட்டில் அதிர்ச்சி


இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரிக்க சிறப்பு குழு

விசாரிக்க சிறப்பு குழு

இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு இடைத்தரகர் பெண், ஆவணங்களை தயாரித்து கொடுத்த நபர் ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமி தற்கொலை முயற்சி

சிறுமி தற்கொலை முயற்சி

இந்நிலையில் ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் அந்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் பாத்ரூம் சுத்தம் செய்யும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் அந்த சிறுமி. இதனையடுத்து மயங்கி கிடந்த அவரை அங்கிருந்து மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி எதற்காக தற்கொலை முயற்சி செய்தார், யாரேனும் நெருக்கடி அல்லது மிரட்டல் விடுத்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+