மனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு
ஈரோடு: மனுதர்மம் விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தன்மீதான நடவடிக்கைகள் குறித்து சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழியாக விழுப்புரம் நோக்கி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி.க்கு அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா அரசு அபிடவிட் தாக்கல் செய்தது.
கொள்கை முடிவு எடுக்கிற வரையில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று மோடி அரசு அறிவித்தது. அதனால் உச்சநீதிமன்றம் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

27 சதவீதம்
இதற்கு முழுக்க முழுக்க மோடி அரசுதான் பொறுப்பு 50 விழுக்காடு மட்டுமல்ல 27 விழுக்காடு கூட வழங்க முடியாது என்று சொல்லி இருக்கிறது. பெரும்பான்மை இந்துக்களுக்காக தாங்கள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் என்று காட்டிக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு எப்படி இந்த பெரும்பான்மை ஓபிசி இந்து மாணவர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை இப்பொழுதாவது ஓபிசி மக்கள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை
மோடி அரசு ஒரு சனாதன அரசு. மதவாத அரசு. சமூகநீதிக்கு எதிரான அரசு. பெரும்பான்மையாக உழைக்கும் இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர்
தமிழக அரசு இது தொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இட ஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். அதனால் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

திருமாவளவன்
தொடர்ந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொல் திருமாவளவன் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவருக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

அறிக்கை
ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கலையரசன் குழு என்பது இது தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கிறது அந்த குழு இதை 10 சதவீதமாக வழங்க வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அதனை ஏழரை சதவீதமாக சுருக்கி ஆளுநருக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறது.

நடவடிக்கை
இரண்டு பேரும் சேர்ந்து நடத்துகிற நாடகம் இது. தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து நடத்துகிற இந்த நாடகம் சமூகநீதிக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மனுதர்மம் விவகாரத்தின் என் மீதான நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications