ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவை தாக்கி பேசினார். திமுகவை ஒரு தீய சக்தி என்றும் விஜய் விமர்சித்து பேசினார். வள்ளுவர் கோட்டத்தில் காட்டும் அக்கறையை மக்களின் வாழ்வாதாரம் மீது காட்டலாமே என்றும், கவர்மென்ட் நடத்துகிறார்களா? கண்காட்சி நடத்துகிறார்களா? எனவும் விஜய் திமுகவை விமர்சித்து பேசினார்.
Dec 18, 2025, 1:15 pm IST
கோவை சென்றுகொண்டிருந்த விஜய்யை விடாமல் துரத்திய தொண்டர்கள் விபத்தில் சிக்கினர்
ஈரோடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு கோவைக்கு விஜய் காரில் சென்றுகொண்டிருக்கிறார்
காரை பின் தொடர வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கினர்
Dec 18, 2025, 12:31 pm IST
விஜய்க்கு செங்கோல் பரிசு
ஈரோடு வந்த விஜய்க்கு செங்கோட்டையன் செங்கோலை பரிசாக வழங்கினார்
Dec 18, 2025, 12:29 pm IST
இன்னும் நிறைய பேர் வருவாங்க - விஜய்
அண்ணன் செங்கோட்டையன் மாதிரி இன்னும் நிறைய பேர் வரப்போகிறார்கள். எல்லாருக்கும் உரிய அங்கீகாரம் கொடுப்போம் என விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:29 pm IST
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்ன மாதிரி
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் பேசி திமுகவை காலி செய்தார்கள். ஏன் இப்படி ஹார்டா பேசுகிறார்கள் என அப்போது நினைத்தேன். இப்போது அவங்க சொன்னதை தான் நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. என ஆவேசமாக பேசினார்.
மேலும், “ஈரோடு மக்களே.. திமுக ஒரு தீய சக்தி.. டிவிகே ஒரு தூய சக்தி.. என்றும், இந்த முறை தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி டிவிகேவுக்கும் தான் போட்டியே” என்று விஜய் ஆவேசமாக பேசினார்.
Dec 18, 2025, 12:24 pm IST
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - விஜய்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா.. (தொண்டர்கள் இல்லை.. இல்லை..) என்ன சொல்வது கேட்கிறதா? - விஜய் பேச்சு
Dec 18, 2025, 12:24 pm IST
காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீங்க.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள். என்ன கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்னு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான்.. என விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:23 pm IST
விஜய் அரசியலே பேச மாட்டேங்கிறார்.. விஜய் கொஞ்ச நேரம் தான் பேசுகிறார். வெறும் 8 நிமிஷம் தான் பேசுறார். நான் ஏன் சார் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில் பேசுவது தான் அரசியல் என்றால் பேச தெரியாது. தெரியும், உங்களை விட எனக்கு அதிகமாகவே பேச தெரியும். ஆனால் அந்த அரசியல் பேச வரவில்லை என்று விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:17 pm IST
எப்படி முடக்கலாம்னு தான் யோசிக்கிறாங்க - விஜய்
விஜய்யை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசித்துகொண்டு இருக்கிறார்கள். 24 * 7 என எப்போதும் இதைத் தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என திமுகவை விஜய் விமர்சித்து பேசினார்.
Dec 18, 2025, 12:17 pm IST
செம்மண் காணாமல் போயிடும் - விஜய்
கொஞ்சம் அசந்தால் மணல், மலைகள் காணாமல் போனது மாதிரி செம்மண்ணும் காணாமல் போயிடும் என்று விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:17 pm IST
எங்களுக்கு நிறைய வேலை இருக்கு - விஜய்
களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு என விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:13 pm IST
மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க - விஜய் பேச்சு
ஈரோட்டில் பேசிய விஜய், “அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம்.நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை.. என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க” என பேசினார்.
Dec 18, 2025, 12:06 pm IST
வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்பேன் - விஜய்
எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:00 pm IST
ஈரோடு மண் விவசாயத்துக்கும் பெயர் போனது - விஜய்
மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்கனும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.. என்று விஜய் பேசினார்.
Dec 18, 2025, 12:00 pm IST
மஞ்சள் விளைகிற பூமி தான் இந்த ஈரோடு பூமி- விஜய்
தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் உரையாற்றி வருகிறார்
Dec 18, 2025, 11:56 am IST
ஈரோடு தளபதியின் கோட்டை - புஸ்சி ஆனந்த்
ஈரோடுக்கு வந்து இருக்கும் அனைவருக்கும் வணக்கம். பெரியார் மண்ணிற்கு விஜய் வந்துள்ளார். மஞ்சள் மண்ணில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வந்துள்ளார். இனி எப்போதும் ஈரோடு தளபதியின் கோட்டை. இங்கு கூடியிருப்பது வெறும் கூட்டத்திற்காக அல்ல. பெரும் மாற்றத்திற்காக.. நாம் போடுவது வெறும் ஓட்டல்ல.. தமிழகத்தின் எதிர்காலத்திற்கானது என புஸ்சி ஆனந்த் பேசினார்.
Dec 18, 2025, 11:55 am IST
போராட்டத்தை முன்னெடுக்கும்
ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “இளைஞர் மாதிரி ஒரு மாநாடு திமுக நடத்தியது. அந்த இளைஞர்கள் சொல்கிறார்கள். இளம் பெரியாராம்.. யாருப்பா இளம் பெரியார்.. முதலில் பெரியாருக்கு ஸ்பெல்லிங் படிக்க தெரியுமா? இங்கே ஒரே பெரியார். ஒரே அம்பேத்கர்.. தலைவர்களை அசிங்கப்படுத்தினால் தவெக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். 2026, 2031 என நாங்கள் போய்க்கொண்டே இருப்போம். இங்கே இருக்கும் மக்கள் சக்தி, எந்த அளவு விஜய் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று கூறினார்.
Dec 18, 2025, 11:54 am IST
இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை விஜய்
செங்கோட்டையன் வந்த பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிடுச்சு.. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை விஜய்யால் மட்டுமே மாற்ற முடியும். தவெக மட்டுமே இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
Dec 18, 2025, 11:50 am IST
செங்கோட்டையன் வந்த பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிடுச்சு - ஆதவ் அர்ஜுனா
Dec 18, 2025, 11:49 am IST
காவிரி ஆறு மாதிரி விஜய்
காவிரி ஆறு மாதிரி தான் விஜய்யும். ஏழை பணக்காரர் வித்தியாசம் இன்றி ஆறு அனைவருக்கும் பாயும், அதேபோலத்தான் விஜய்யும் அனைவருக்கும் பொதுவானவர். அடுத்த முதல்வராக விஜய்தான் வர வேண்டும்.
கொங்கு மண்டலத்திற்கு வருகை தந்துள்ளார் ஜனநாயகன். விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார். நம்மளை பார்த்து ரசிகர் கூட்டம் என்கிறார்கள். ரசிகர் கூட்டமாக கூட இருக்கலாம். திமுக மாதிரி கொள்ளை, சுயநல கூட்டமாக இருக்க கூடாது என்று அருண்ராஜ் பேசினார்.
Dec 18, 2025, 11:41 am IST
234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் - செங்கோட்டையன்
ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய் - செங்கோட்டையன்
கடலென கூடியுள்ள மக்களை பார்க்கும் போது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது - செங்கோட்டையன்
நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய். நல்ல தலைவர் தேவை என்னும் மக்களின் கனவு நனவாகியுள்ளது. 500 கோடி வருமானத்தை விட்டு விஜய் வந்துள்ளார். புரட்சி தலைவரை பார்த்தேன். இன்று புரட்சி தளபதியை பார்க்கிறேன். இது தீர்ப்பளிக்கிற கூட்டம் என செங்கோட்டையன் பேசினார்.
Dec 18, 2025, 11:34 am IST
நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சித் தளபதி தான் - செங்கோட்டையன்
Dec 18, 2025, 11:29 am IST
பரப்புரை மைதானம் வந்தார் விஜய்
ஈரோடு விஜயமங்கலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு விஜய் வந்தடைந்துள்ளார். காலை 11 மணி முதல் 1 மணி வரை மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்த நிலையில், விஜய் சரியாக 11.18 மணிக்கு வந்தடைந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் விஜய் பரப்புரை செய்ய உள்ளார்.
Dec 18, 2025, 11:23 am IST
ஈரோடு பொதுக்கூட்டம் மைதானம் வந்தடைந்தார் விஜய்
விஜய்யின் கார் மைதானத்திற்குள் வந்ததும் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வருகை தந்தார்
11 மணி முதல் 1 மணிக்குள் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்து இருந்தனர்
Dec 18, 2025, 11:15 am IST
விஜய் பிரசார வாகனத்தில் செங்கோட்டையன்
ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ள செங்கோட்டையன், விஜய் பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் ஏறி எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். விஜய் பிரசார வாகனம் மீது ஏறி நின்ற போது தொண்டர்கள் உற்சாகமடைந்து ஆர்ப்பரித்தனர்.
Dec 18, 2025, 11:13 am IST
ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்து வரும் நிலையில் விஜயமங்கலம் டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. கூட்டநெரிசல் ஏற்படும் காரணத்தினால் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.
Dec 18, 2025, 11:10 am IST
தவெக தொண்டர்கள் விஜய் காரை பின் தொடர்ந்து செல்லக்கூடாது என்று புஸ்சி ஆனந்த் நேற்று அறிவுறுத்தியிருந்தார். எனினும், இதனை கேட்காத தவெக தொண்டர்கள் ஹெல்மெட் அணியாமல், விஜய்யின் காரை பைக்கில் பின் தொடர்ந்து செல்கிறார்கள். ஹைவேயில் சில இடங்களில் கூட்டமாக விஜய்யை பார்க்க பெண்களும் சில இடங்களில் திரண்டு நின்றனர்.அவர்களை பார்த்து விஜய் கை அசைத்துவிட்டு சென்றார்.
Dec 18, 2025, 11:07 am IST
கரூர் மாதிரி ஏதும் நடக்க கூடாது.. ஈரோடு மக்கள் சந்திப்பு ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஈரோடுக்கு முதல் முறை விஜய் வருகிறார். ரசிகர் மன்றம் இங்க தான் முதலில் ஆரம்பிச்சாங்க.. என்ன பேசுவார் என்று ஆவலோடு இருக்கிறோம். முதல் முதலில் விஜய்யை நேரில் பார்க்க இருக்கிறோம் என தவெக கூட்டத்திற்கு வந்த பெண் தொண்டர்கள் கூறினர்.
Dec 18, 2025, 10:56 am IST
ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் காரில் வந்துகொண்டிருக்கிறார். காரை பின் தொடர வேண்டாம் என்று சொல்லியும் சில தவெக தொண்டர்கள் விஜய்யின் காரை பின் தொடர்ந்து வருகிறார்கள். விஜய்யும் கையசைத்தபடி வந்து கொண்டிருக்கிறார்.
Dec 18, 2025, 10:56 am IST
ஈரோடு தவெக பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளுடன் வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். கைக்குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று தவெக தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
READ MORE
10:52 AM, 18 Dec
> விஜய் பொதுக்கூட்டம்: தவெக பொருளாளர் வெங்கட்ராமன் போலீசாரால் தடுத்து நிறுத்தம்
>
> விவிஐபி கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் வெங்கட்ராமன் வாக்குவாதம்
>
> விவிஐபி கார் பதிவெண் பட்டியலில் வெங்கட்ராமன் பெயரும் கார் பதிவெண்ணும் இல்லாததால் போலீசார் அனுமதி மறுப்பு
>
10:52 AM, 18 Dec
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஈரோடு பெருந்துறை அருகே நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டுள்ளார்.
10:53 AM, 18 Dec
ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து துடித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போலீசார் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
10:53 AM, 18 Dec
கோவை விமான நிலையத்தில் இருந்து ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு விஜய் காரில் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரது காரை தொண்டர்கள் பின் தொடர்கிறார்கள்.
10:56 AM, 18 Dec
ஈரோடு தவெக பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளுடன் வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். கைக்குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று தவெக தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
10:56 AM, 18 Dec
ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் காரில் வந்துகொண்டிருக்கிறார். காரை பின் தொடர வேண்டாம் என்று சொல்லியும் சில தவெக தொண்டர்கள் விஜய்யின் காரை பின் தொடர்ந்து வருகிறார்கள். விஜய்யும் கையசைத்தபடி வந்து கொண்டிருக்கிறார்.
11:07 AM, 18 Dec
கரூர் மாதிரி ஏதும் நடக்க கூடாது.. ஈரோடு மக்கள் சந்திப்பு ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஈரோடுக்கு முதல் முறை விஜய் வருகிறார். ரசிகர் மன்றம் இங்க தான் முதலில் ஆரம்பிச்சாங்க.. என்ன பேசுவார் என்று ஆவலோடு இருக்கிறோம். முதல் முதலில் விஜய்யை நேரில் பார்க்க இருக்கிறோம் என தவெக கூட்டத்திற்கு வந்த பெண் தொண்டர்கள் கூறினர்.
11:10 AM, 18 Dec
தவெக தொண்டர்கள் விஜய் காரை பின் தொடர்ந்து செல்லக்கூடாது என்று புஸ்சி ஆனந்த் நேற்று அறிவுறுத்தியிருந்தார். எனினும், இதனை கேட்காத தவெக தொண்டர்கள் ஹெல்மெட் அணியாமல், விஜய்யின் காரை பைக்கில் பின் தொடர்ந்து செல்கிறார்கள். ஹைவேயில் சில இடங்களில் கூட்டமாக விஜய்யை பார்க்க பெண்களும் சில இடங்களில் திரண்டு நின்றனர்.அவர்களை பார்த்து விஜய் கை அசைத்துவிட்டு சென்றார்.
11:13 AM, 18 Dec
ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்து வரும் நிலையில் விஜயமங்கலம் டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. கூட்டநெரிசல் ஏற்படும் காரணத்தினால் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.
11:15 AM, 18 Dec
விஜய் பிரசார வாகனத்தில் செங்கோட்டையன்
ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ள செங்கோட்டையன், விஜய் பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் ஏறி எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். விஜய் பிரசார வாகனம் மீது ஏறி நின்ற போது தொண்டர்கள் உற்சாகமடைந்து ஆர்ப்பரித்தனர்.
11:23 AM, 18 Dec
ஈரோடு பொதுக்கூட்டம் மைதானம் வந்தடைந்தார் விஜய்
விஜய்யின் கார் மைதானத்திற்குள் வந்ததும் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வருகை தந்தார்
11 மணி முதல் 1 மணிக்குள் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்து இருந்தனர்
11:29 AM, 18 Dec
பரப்புரை மைதானம் வந்தார் விஜய்
ஈரோடு விஜயமங்கலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு விஜய் வந்தடைந்துள்ளார். காலை 11 மணி முதல் 1 மணி வரை மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்த நிலையில், விஜய் சரியாக 11.18 மணிக்கு வந்தடைந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் விஜய் பரப்புரை செய்ய உள்ளார்.
11:34 AM, 18 Dec
நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சித் தளபதி தான் - செங்கோட்டையன்
11:40 AM, 18 Dec
நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய். நல்ல தலைவர் தேவை என்னும் மக்களின் கனவு நனவாகியுள்ளது. 500 கோடி வருமானத்தை விட்டு விஜய் வந்துள்ளார். புரட்சி தலைவரை பார்த்தேன். இன்று புரட்சி தளபதியை பார்க்கிறேன். இது தீர்ப்பளிக்கிற கூட்டம் என செங்கோட்டையன் பேசினார்.
11:41 AM, 18 Dec
234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் - செங்கோட்டையன்
ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய் - செங்கோட்டையன்
கடலென கூடியுள்ள மக்களை பார்க்கும் போது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது - செங்கோட்டையன்
காவிரி ஆறு மாதிரி தான் விஜய்யும். ஏழை பணக்காரர் வித்தியாசம் இன்றி ஆறு அனைவருக்கும் பாயும், அதேபோலத்தான் விஜய்யும் அனைவருக்கும் பொதுவானவர். அடுத்த முதல்வராக விஜய்தான் வர வேண்டும்.
கொங்கு மண்டலத்திற்கு வருகை தந்துள்ளார் ஜனநாயகன். விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார். நம்மளை பார்த்து ரசிகர் கூட்டம் என்கிறார்கள். ரசிகர் கூட்டமாக கூட இருக்கலாம். திமுக மாதிரி கொள்ளை, சுயநல கூட்டமாக இருக்க கூடாது என்று அருண்ராஜ் பேசினார்.
11:50 AM, 18 Dec
செங்கோட்டையன் வந்த பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிடுச்சு - ஆதவ் அர்ஜுனா
11:54 AM, 18 Dec
இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை விஜய்
செங்கோட்டையன் வந்த பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிடுச்சு.. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை விஜய்யால் மட்டுமே மாற்ற முடியும். தவெக மட்டுமே இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
11:55 AM, 18 Dec
போராட்டத்தை முன்னெடுக்கும்
ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “இளைஞர் மாதிரி ஒரு மாநாடு திமுக நடத்தியது. அந்த இளைஞர்கள் சொல்கிறார்கள். இளம் பெரியாராம்.. யாருப்பா இளம் பெரியார்.. முதலில் பெரியாருக்கு ஸ்பெல்லிங் படிக்க தெரியுமா? இங்கே ஒரே பெரியார். ஒரே அம்பேத்கர்.. தலைவர்களை அசிங்கப்படுத்தினால் தவெக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். 2026, 2031 என நாங்கள் போய்க்கொண்டே இருப்போம். இங்கே இருக்கும் மக்கள் சக்தி, எந்த அளவு விஜய் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று கூறினார்.
11:56 AM, 18 Dec
ஈரோடு தளபதியின் கோட்டை - புஸ்சி ஆனந்த்
ஈரோடுக்கு வந்து இருக்கும் அனைவருக்கும் வணக்கம். பெரியார் மண்ணிற்கு விஜய் வந்துள்ளார். மஞ்சள் மண்ணில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வந்துள்ளார். இனி எப்போதும் ஈரோடு தளபதியின் கோட்டை. இங்கு கூடியிருப்பது வெறும் கூட்டத்திற்காக அல்ல. பெரும் மாற்றத்திற்காக.. நாம் போடுவது வெறும் ஓட்டல்ல.. தமிழகத்தின் எதிர்காலத்திற்கானது என புஸ்சி ஆனந்த் பேசினார்.
12:00 PM, 18 Dec
மஞ்சள் விளைகிற பூமி தான் இந்த ஈரோடு பூமி- விஜய்
தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் உரையாற்றி வருகிறார்
12:00 PM, 18 Dec
ஈரோடு மண் விவசாயத்துக்கும் பெயர் போனது - விஜய்
மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்கனும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.. என்று விஜய் பேசினார்.
12:06 PM, 18 Dec
வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்பேன் - விஜய்
எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என விஜய் பேசினார்.
12:13 PM, 18 Dec
மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க - விஜய் பேச்சு
ஈரோட்டில் பேசிய விஜய், “அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம்.நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை.. என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க” என பேசினார்.
12:17 PM, 18 Dec
எங்களுக்கு நிறைய வேலை இருக்கு - விஜய்
களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு என விஜய் பேசினார்.
12:17 PM, 18 Dec
செம்மண் காணாமல் போயிடும் - விஜய்
கொஞ்சம் அசந்தால் மணல், மலைகள் காணாமல் போனது மாதிரி செம்மண்ணும் காணாமல் போயிடும் என்று விஜய் பேசினார்.
12:17 PM, 18 Dec
எப்படி முடக்கலாம்னு தான் யோசிக்கிறாங்க - விஜய்
விஜய்யை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசித்துகொண்டு இருக்கிறார்கள். 24 * 7 என எப்போதும் இதைத் தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என திமுகவை விஜய் விமர்சித்து பேசினார்.
12:23 PM, 18 Dec
விஜய் அரசியலே பேச மாட்டேங்கிறார்.. விஜய் கொஞ்ச நேரம் தான் பேசுகிறார். வெறும் 8 நிமிஷம் தான் பேசுறார். நான் ஏன் சார் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில் பேசுவது தான் அரசியல் என்றால் பேச தெரியாது. தெரியும், உங்களை விட எனக்கு அதிகமாகவே பேச தெரியும். ஆனால் அந்த அரசியல் பேச வரவில்லை என்று விஜய் பேசினார்.
12:24 PM, 18 Dec
காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீங்க.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள். என்ன கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்னு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான்.. என விஜய் பேசினார்.
12:24 PM, 18 Dec
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - விஜய்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா.. (தொண்டர்கள் இல்லை.. இல்லை..) என்ன சொல்வது கேட்கிறதா? - விஜய் பேச்சு
TVK Vijay’s Erode Rally Today LIVE News in Tamil (ஈரோட்டில் இன்று தவெக பொதுக்கூட்டம், விஜய் பேச்சு): Check Out the LIVE News Updates on TVK chief Vijay’s Erode rally today, key highlights from his speech, major political announcements, crowd reactions, and real-time news updates from the campaign meeting in Tamil at Oneindia Tamil.