ஈரோட்டில் நேற்று வரை திருவிழாக் கோலம்! இன்று ஆள் அரவமின்றி வெறிச்சோடிய சாலைகள்! களையிழந்த வீதிகள்!
இடைத்தேர்தல் திருவிழா முடிந்ததால் வெறிச்சோடிய ஈரோடு
ஈரோடு: ஈரோட்டில் நேற்று வரை திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாக் கோலத்தில் காணப்பட்ட சாலைகளும், வீதிகளும் இன்று ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கடந்த ஒரு மாதமாக வாடகை வீடுகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாக காட்சியளித்த நிலையில் இன்று மீண்டும் டூலெட் போர்டுகள் தொங்க விடப்பட்டுள்ளன.
போடுங்கம்மா ஓட்டு என்ற முழக்கத்துடன் பெரிய கூட்டமாக சுற்றி வந்த அரசியல் கட்சியினர் நேற்று மாலையே ஈரோட்டை காலி செய்து புறப்பட்டுவிட்டதால் வீதிகள் தோறும் களையிழந்து காணப்படுகின்றன.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை வாக்குப்பதிவு நாள் என்பதால் வெளிமாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலையே அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசலுடனும், எந்நேரம் பார்த்தாலும் ஜெஜெவென கூட்டத்துடனும் காணப்பட்ட ஈரோடு கிழக்குத் தொகுதி இன்று வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மீண்டும் வேலைக்கு
காலை மாலை என நாளொன்றுக்கு இரண்டு முறை வீடு தேடி வந்த அரசியல் கட்சியினராலும் அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களாலும் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் உற்சாகமுடன் காணப்பட்டனர். பலரும் வேலைக்கு கூட செல்லாமல் பிரச்சாரத்தில் பங்கேற்று அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தனர். இப்போது ஆட்டம் காலி படுதா காலி என்பதால் மீண்டும் இன்று முதல் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

பிரியாணி விருந்து
திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிரியாணி விருந்து வைத்தது. இதில் யார் வேண்டுமானால் பங்கேற்று சாப்பிடலாம் என்ற நிலை இருந்ததால் எல்லோரும் ஒரு பிடி பிடித்தார்கள். மொத்தத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்கத் தட்டில் வைத்து தாலாட்டினார்கள் என்று கூறலாம்.

வியாபாரம் மந்தம்
கடந்த ஒரு மாத காலமாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட கடைகளிலும், உணவு விடுதிகளிலும், தேநீர் கடைகளிலும் வியாபாரம் சக்கை போடு போட்டது. ஆனால் நேற்றிரவு முதலே வியபாரம் மந்த நிலையை அடைந்துவிட்டது. இதனால் வியாபாரிகள் தரப்பினரும் களையிழந்து காணப்படுகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications