10 சக்கர லாரியா?.. 12 சக்கர லாரியா?.. பண்ணாரி செக் போஸ்ட்டில்.. லஞ்சம் வசூலா.. பரபர புகார்கள்!
செக்போஸ்ட்டில் லஞ்சம் வாங்கிய ஊழியர்களின் வீடியோ வைரலாகி வருகிறது
ஈரோடு: பண்ணாரி செக்போஸ்ட்டில்.. ராத்திரி நேரத்தில்.. டயர்கள் அடிப்படையில் லாரிகளை தரம் பிரித்து லஞ்சம் வாங்கி உள்ளனர் ஊழியர்கள்.. அந்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
Recommended Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில், தமிழக-கர்நாடக எல்லையில் பண்ணாரி அம்மன் கோயில் அருகே 2 மாநில எல்லையில் செக் போஸ்ட்டுகள் உள்ளன.. வட்டார போக்குவரத்து துறை, போலீஸ், வனத்துறை சோதனை சாவடிகள் உள்ளன.

அதனால், தமிழகம், கர்நாடகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சரக்கு லாரி போக்குவரத்து நடந்து வருகிறது.. அதனால் இந்த ரோடு எப்போதுமே பிஸியாக இருக்கும்.. முக்கியமான சோதனை சாவடியும்கூட!
இந்த பக்கம் வரும் சரக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறதா? எல்லா வண்டிகளுக்கும் லைசென்ஸ் உள்ளதா? என்ற சோதனைகள் வழக்கமாக நடந்து கொண்டே இருக்கும். ஒருவேளை முறைகேடாக, அதாவது, அதிக பாரம் ஏற்றி லாரிகள் கடந்து சென்றால், அந்த டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது அது சம்பந்தமாக வீடியோவே வெளியாகிவிட்டது.. சம்பவத்தன்று இரவு, வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில், ஒரு லாரி வந்து நிற்கிறது, அந்த டிரைவரிடம் அங்கிருந்த அதிகாரி ரூ.3 ஆயிரம் கேட்கிறார்.. உடனே அந்த டிரைவர்களும் பணம் தந்துவிடுகிறார்கள்.
அது சம்பந்தமாக தங்களுக்கு எழுதி தர முடியுமா என்று டிரைவர் கேட்க, அதிகாரியோ, "லஞ்சமாக பெறும் பணத்திற்கு எழுதி தர முடியுமா? என்று சொல்லிவிட்டு, 10 சக்கர லாரியா? 12 சக்கர லாரியா?" என்று விசாரித்து விட்டு பணம் வாங்குவது பதிவாகி உள்ளது.
இந்த செக்போஸ்ட்டில் ஆய்வாளர் பிரேம ஞான குமாரிதான் பொறுப்பாளர் ஆவார்.. அவருடன் உதவியாளர் முனியப்பனும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 நாளைக்கு முன்னாடிதான் பிரேமா சென்னையில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி இங்கு வந்தார்.. பொறுப்பேற்ற 2-வது நாளே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் பரபரப்பையும் சேர்த்து தந்து வருகிறது.... இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரு
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications