Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் சப்- இன்ஸ்பெக்டர் பைக்கில் சென்ற போது.. குறுக்கே எமனாக வந்த நாய்.. கைவிட்ட ஹெல்மெட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அடுத்த சென்னசமுத்திரம் வருந்தியாபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் மோகன்ராஜ் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். தலை கவசம் அணிந்தபடி தான்.. அந்த சாலையில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்து எமனாக மாறியது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சாலைகளில் செல்வோருக்கு தெருநாய்கள் பல எமனாக இருக்கின்றன. தெருநாய்களை அப்புறப்படுத்தக்கூடாது என்ற சட்டம் காரணமாக எல்லா பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. தெருநாய்கள் பராமரிப்பு குறித்து சரியான புரிதல்களோ, அதை பற்றி விவரங்களோ இதுவரையில் இல்லை. தெரு நாய்கள் தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றினால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும்.

What happened to the Erode police SI who rode a motorcycle because the dog came across him

விரட்டும் தெரு நாய்கள்

ஏனெனில் தெருநாய்களுக்கு பயந்து இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை பல சாலைகளில் இருக்கிறது. இரவில் கூட்டாக சேர்ந்து குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன. சில நேரங்களில் பெண்களையும் கடிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் வரும் ஆண்களை விரட்டுகின்றன. இது தொடர்கதையாக உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தெருநாய் ஒன்று குறுக்கே வந்ததால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இன்று உயிருடன் இல்லை.

சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த சென்னசமுத்திரம் வருந்தியாபாளையத்தை சேர்ந்த 56 வயதாகும் மோகன்ராஜ் என்பவர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சித்ரா செல்வி. இவர் கொடுமுடி சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் நேற்று காலை வீட்டில் இருந்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

நாய் குறுக்கே வந்தது

கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் அருகே சென்றபோது மோகன்ராஜின் பைக்கின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்துவிட்டது. இதனால் அருகே இருந்த மின் கம்பத்தில் அவருடைய தலை பலமாக மோதியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+