ஈரோடு கிழக்கு தேர்தலில் இந்த கட்சிக்கு தான் வெற்றி.. வாகைசூடும் வேட்பாளர் யார்? பரபர சர்வே முடிவு!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வே முடிவின் முக்கிய விபரங்கள் வருமாறு:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா காலமான நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொகுதியில் ஆளும் திமுக போட்டியிடவில்லை. மாறாக திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கி உள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

இறுதிக்கட்ட பிரசாரம்
தொகுதியில் தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. நாளையும் பிரசாரம் முடிவுக்கு வர உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நாளை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அதிமுக வேட்பாளர், தேமுதிக, நாம் தமிழர் கட்சியின் தலைவர்களும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தல் பற்றி சர்வே
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து Spick Media மற்றும் அஜய் பவுண்டேஷன் இணைந்து சர்வே மேற்கொண்டது. பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 1மோ் தேதி வரை இந்த சர்வே நடந்தது. 14,160 பேரிடம் தமிழ், ஆங்கிலத்தில் வினாப்பட்டியல் வழங்கி சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

திருமகன் ஈவெரா பற்றிய கேள்வி
ஈரோடு கிழக்கு தொகுதியின் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் செயல்பாடு எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு மிகச்சிறப்பாக இருந்ததாக 21.66 சதவீதம் பேரும், சிறப்பாக இருந்ததாக 25.38 சதவீதம் பேரும், மோசமாக இரந்தது என 21.40 சதவீதம் பேரும், மிகவும் மோசமாக இருந்ததாக 21.11 சதவீதம் பேரும், பதில் இல்லை என 10.45 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

காங்., கமல்ஹாசன் ஆதரவு ஏன்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு 29.45 சதவீதம் பேர் ஏமாற்றமளிப்பதாகவும், 25.08 சதவீதம் பேர் வெற்றி முக்கியம் எனவும், 34.22 சதவீதம் பேர் எதிர்பார்த்தது தான் எனவும், 11.25 சதவீதம் பேர் பதில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தொகுதி பிரச்சனைகள் என்ன?
மேலும் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகள் என்ன? என்ற கேள்விக்கு குடிநீர் தட்டுப்பாடு என 4.52 சதவீதம் பேரும், மின்தடை என 19.10 சதவீதம் பேரும், வேலையின்மை என 30.50 சதவீதம் பேரும், விலைவாசி உயர்வு என 13.47 சதவீதம் பேரும், அச்சம்/திருட்டு என 3.54 சதவீதம் பேரும், வினாப்பட்டியலில் இல்லாத பிற பிரச்சனைகள் என 16.24 சதவீதம் பேரும், பதில் இல்லை என 12.36 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

யாருக்கு வாக்களிப்பீர்கள்?
இதையடுத்து சின்னத்தை பார்த்து வாக்களித்தால் நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு காங்கிரஸ் என 50.39 சதவீதம் பேரும் அதிமுக என 35.29 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி என 5.02 சதவீதம் பேரும், பிற கட்சியினர் என 4.53 சதவீதம் பேரும், பதில் இல்லை என 4.77 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மேலும் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சி என்று 57.40 சதவீதம் பேரும் அதிமுக என 31.56 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி எனஅ 4.23 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 3.47 சதவீதம் பேரும், பதில் இல்லை என 3.34 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

வெற்றி யாருக்கு?
மேலும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த சர்வேயின் படி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிப்பதாக 47.75 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஓட்டளிப்பதாக 6.66 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளிப்பதாக 6.88 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு ஓட்டளிப்பதாக 1.97 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 2.34 சதவீதம் பேரும், பதில் இல்லை என 4.40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய சூழலில் திமுக மீதான அதிருப்தி என்பது எந்த வகையிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என சர்வே முடிவு தெளிவாக கூறியுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications