கணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்
Recommended Video
ஈரோடு: தன் கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி, ராதாகிருஷ்ணன் என்பவன், தன்னை ஐந்து முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு எஸ்பியிடம் இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா( உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது கணவரை மதுபழக்கத்துக்கு அடிமையாக்கி ராதாகிருஷ்ணன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துளளார்.அவர் அளித்த புகார் மனுவில், எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அவருக்கு மதுக்கடையில் ராதாகிருஷ்ணன் என்பவர் அறிமுகம் ஆனார்.

அவர் எனது கணவருக்கு மது வாங்கி கொடுத்து தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார். இதனால் என் கணவர் ஒருநாள் அவரை என் வீட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அதன் பிறகு என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் நான் தற்கொலை செய்ய முடிவு செய்து அதற்கும் சாணி பவுடரை குடித்து முயன்றேன். அப்போது மருத்துவமனைக்கு வந்து என்னை பார்த்த ராதாகிருஷ்ணன் எனக்கு ஆறுதல் கூறுவது போல் பேசி பணம் கொடுத்தார்.
அதன் பிறகு ஒருநாள் வீட்டுக்கு வந்து ராணி மாதிரி வைத்துக்கொள்வதாக கூறி எல்லை மீறினான். இப்படி ஐந்து முறை என்னிடம் எல்லை மீறினான். இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணனை பற்றிய உண்மை வெளியில் தெரிந்ததால் தைரியமாக புகார் கொடுக்க வந்துள்ளேன். என்னை காப்பாற்ற வேண்டும்" என கூறியுள்ளார்.
முன்னதாக ரியல் எஸ்டேட் பிரமுகர் ராதாகிருஷ்ணன் ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்தார். இப்போது புதிய புகாரையும் சேர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications