புதுச்சேரியில் பிப்.11 முதல் ஹெல்மெட் கட்டாயம்.. நாராயணசாமியின் பேச்சை புறம்தள்ளிய டிஜிபி
புதுச்சேரி:புதுச்சேரியில் வரும் 11ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்ந ஆண்டு மே மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்பட்டது.பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஹெல்மெட் அணியலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் அதிகம் என்பதால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டுமென்பதில் ஆளுநர் கிரண்பேடி தீவிரம் காட்டி வருகிறார்.

மோதல் முற்றுகிறது
இந்த விவகாரத்தில் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனிடையே காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களை டிஜிபி சுந்தரி நந்தா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

322 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 322 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழிந்துள்ளனர். அதனை தடுக்கும் பொருட்டு புதுச்சேரி மாநிலத்தில் வரும் 11ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பறிமுதல்
அதனை மீறுபவர்கள் மீது முதல்முறை 100 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறையும் விதிகளை மீறுபவர்களுக்கு 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். இதே போல் கார்களில் செல்பவர்களும் வரும் திங்கட்கிழமை முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்து.

காவல்துறைக்கு அபராதம்
மீறுபவர்கள் மீது ஹெல்மெட்டிற்கு விதிக்கப்படும் அபராதங்களே விதிக்கப் படும். அதேபோல் ஹெல்மெட் அணியாத போலீசாருக்கும் அபராதம் விதிக்கப் படும் என்று அவர் கூறினார்.
|
கடமை உள்ளது
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. அறிவுரை மட்டுமே கூற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை தமக்கு உள்ளது. மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த நடடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications