இதய நோயால் பாதிக்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன்.. உங்களின் உதவி உயிர் பிழைக்க உதவும்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் ரவிக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மாணவரின் மருத்துவ செலவுக்காக தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
சென்னையின் புறநகர் பகுதியான எழில் நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ரவி 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது குடும்பம் கொஞ்சம் பெரியது. அப்பா காமராஜ் அதிகாலையில் பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு பேக்கேஜிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுவார். வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வர எப்படி இருந்தாலும் மணி 10 ஆகிவிடும். அம்மா சரிதா, கணவருக்கும், ரவியுடன் சேர்த்து 5 பிள்ளைகளுக்கும் சமையல் செய்து கொடுப்பதிலேயே காலத்தை தள்ளிவிட்டார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பிள்ளைகள் படிக்கிறார்கள், அவகள் என்றாவது ஒரு நாள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று பெற்றோர் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் அந்த நாள் வந்தது. அதாவது 5 பிள்ளைகளில் இளையவரான ரவி திடீரென பள்ளியில் மயங்கி விழ, பதறியடித்துக்கொண்டு ஓடிய சரிதா, அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகனை அனுமதித்தார். ரவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் பெரியதாக பிரச்னை ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் ரவியின் நடவடிக்கையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டது. முன்பு இருந்ததை போல தற்போது ரவியால் ஓடி ஆடி விளையாட முடியவில்லை, வகுப்பறையில் கவன சிதறல் ஏற்பட்டது.

இதே நிலைமை நீடித்தால் என்ன செய்வது என யோசித்த பெற்றோர் ரவியை பரிசோதனை மையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதாவது, ரவிக்கு ருமாட்டிக் ஹார்ட் டிசீஸ், கடுமையான மிட்ரல் ரெகர்ஜிட்டேஷன், மிதமான நுரையீரல் உயர் இரத்த அழுத்த பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதை தாய் சரிதாவால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உடனடியாக சிகிச்சை கொடுக்காவிட்டால் மகன் இறந்துவிடுவான் என்று மட்டும் அவருக்கு தெரியும். உலகமே இருண்டு விட்டதை போன்ற உணர்வு. எங்கு செல்வது? யாரை கேட்பது? லட்சக்கணக்கில் பணம் கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லையே. உடைந்து உட்கார்ந்த சரிதா தற்போது வரை மீளவில்லை.

சிலர் மகனை அழைத்துக்கொண்டு மியாட் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்பு இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். ரவி தற்போது இதய செயலிழப்பில் இருக்கிறார். இந்த ஆபத்தான நிலையைச் சமாளிக்க, ரவிக்கு மிட்ரல் வால்வு பழுது எனப்படும் ஆரம்ப அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்காக ரூ.3.5 லட்சம் செலவாகும். ரவியின் பெற்றோர் படித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த தொகையை எப்படி திரட்டுவது என தெரியவில்லை. அழகான குடும்பம் தற்போது சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யுங்கள். ஒரு சிறிய தொகை கூட ரவியையும், அவரது குடும்பத்தையும் இந்த துயரத்திலிருந்து மீட்டெடுக்க உதவும். முடிந்தவரை உதவுங்கள்.



-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications