26 வாரங்களில் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிர் காக்க உதவுங்கள்.. சிறிய உதவி மாற்றத்தை ஏற்படுத்தும்
சென்னை: 26 வாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிகிச்சைக்காக நன்கொடையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்குழந்தை உயிர் பிழைத்து இருக்க நீங்களும் உதவலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் குமாரி, சதீஷ் தம்பதியினர். எல்லோரையும் போலவே இவர்களும் புதிய உற்சாகத்துடன் திருமண வாழ்க்கையை தொடங்கினர். எல்லாம் நல்லபடியாகதான் போய்க்கொண்டிருந்தது. பிரசவ காலமும் நெருங்கியது. ஆனால் பிரசவத்திற்கு மூன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் 26 மாதங்களிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டன. மூன்றரை மாதங்களுக்கு முன்னர் குழந்தைகள் பிறந்ததால் அக்குழந்தைகள் தற்போது தீவிரமான பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் சில நூறு கிராம்கள் மட்டுமே எடையுள்ளன. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நிறைய மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. தற்போது அவர்கள் சுவாச கருவி மூலம் உயிர்பிழைத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் வளர உதவுவதற்காக ஒரு குழாய் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சோகம் என்னவெனில் ஒரு குழந்தைக்கு இதயத்தில் பிடிஏ எனப்படும் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்னையுடன் குழந்தை நீண்ட நாள் உயிருடன் வாழ முடியாது.

தற்போது இந்த குழந்தைகள் நாகர்கோவில் ஐபிஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு, கண்காணிப்பு மற்றும் வளர பாதுகாப்பான இடம் தேவை. அதனால் தான் உங்கள் ஆதரவை கேட்கிறோம். எங்கள் பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம், அவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட உதவலாம். இதில் அவர்கள் சுவாசிக்கத் தேவையான இயந்திரங்கள், சிறப்பு உணவு, இதய சிகிச்சைகள், பரிசோதனைகளை செய்ய முடியும்.

ஒரு சிறிய நன்கொடை கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் ஆதரவு குடும்பத்திற்கு தேவையான பணத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்த குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் தரும்.












Click it and Unblock the Notifications