சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. திடுக் தகவல்கள்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்தியில் பிரபலமான சீரியல் நடிகை வைஷாலி தக்கர் அவருடைய முன்னாள் காதலனின் டார்ச்சரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி, ரக்ஷாபந்தன், கா, சசுரல் சிமர் போன்ற இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தார். இவருக்கு 30 வயதாகிறது.

இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் படுஆக்டிவ்வாக இருந்தார். இவரை 5 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்கிறார்கள்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்த நிலையிலே வைஷாலிக்கு அவருடைய காதலன் டாக்டர் அபிநந்தனுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் ஜூனில் திருமணம் முடிவான நிலையில் அந்த காதல் முறிந்துவிட்டது.

சாப்ட்வேர் என்ஜீனியர்

சாப்ட்வேர் என்ஜீனியர்

இதையடுத்து அவர் அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியருடன் திருமணம் நடைபெறுவதாாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் ஜரூராக செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்தூரில் உள்ள தனது வீட்டில் அவர் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

திடுக் தகவல்கள்

திடுக் தகவல்கள்

அவர்கள் அங்கிருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் அவர் ராகுல் என்பவர் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த ராகுல் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராகுலின் தன்னை டார்ச்சர் செய்வது அனைத்தும் அவரது மனைவி திவ்யாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவனை காப்பாற்றுவதற்காக பொதுவெளியில் என்னை அசிங்கமாக திவ்யா திட்டினார்.

நல்ல மகள்

நல்ல மகள்

லவ் யூ அப்பா, அம்மா. நான் ஒரு நல்ல மகளாக இருக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். தயவு செய்து ராகுலையும் அவரது குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும். ராகுலும், திவ்யாவும் என்னை 2 ஆண்டுகளாக சித்ரவதை செய்தனர். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் எனது ஆத்மா சாந்தி அடையாது. I Quit என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

முறிவுக்கு காரணம் ராகுல்

முறிவுக்கு காரணம் ராகுல்

ராகுல் வைஷாலியின் முன்னாள் காதலன் என சொல்லப்படுகிறது. மேலும் ராகுல், வைஷாலியின் பக்கத்து வீட்டில் வசிப்பவராம். அபிநந்தனுடனான காதல் முறிந்ததற்கு ராகுல்தான் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. தன்னுடன் வைஷாலி எடுத்த புகைப்படங்களை அபிநந்தனுக்கு ராகுல் அனுப்பியதாக தெரிகிறது.

விசாரணையை தொடங்கி போலீஸ்

விசாரணையை தொடங்கி போலீஸ்

இந்த புகைப்படங்களால்தான் அபிக்கும் வைஷாலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் சாப்ட்வேர் என்ஜீனியருடன் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அதையும் ராகுல் கெடுத்துவிடுவாரோ என்று அஞ்சிய வைஷாலி இந்த துயரமான முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது. வைஷாலியின் கடிதத்தை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+