Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூர் விமான நிலையத்தை தடுக்கும் அந்த ரகசிய கை.. சந்திரபாபு நாயுடு போட்ட பிரஷர்தான் காரணமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது. இது திட்டத்திற்குப் பெரும் பின்னடைவு. அந்த வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளதால், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதே சமயம் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இதற்கு பின் இருக்கலாம் என்றும் ஒரு கருத்து வைக்கப்படுகிறது.

கடந்த வாரம், HAL-க்கு வான்வெளி தேவைப்படுவதாக அமைச்சகம் கடிதம் மூலம் கோரிக்கையை மறுத்தது. : "HAL-க்கு வான்வெளி தேவை என அமைச்சகம் தெரிவித்துக் கோரிக்கையை நிராகரித்தது. மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராயும்." என்று கூறப்பட்டு உள்ளது.

Hosur Chandrababu Naidu

கடந்த ஆண்டு ஜூன் மாதம், விமான நிலையத்திற்குத் தேவையான வான்வெளித் தளர்வுக்கான தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நவம்பரில், தலைமைச் செயலாளர், HAL பாதிப்பின்றி ஓசூரில் விமான நிலையம் அமைப்பது சாத்தியம் என ஒருங்கிணைப்புகளுடன் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அரசு வட்டார தகவல்கள் குறிப்பிட்டதாவது: "விவாதம் இல்லாமலேயே கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏமாற்றம். தமிழக அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சந்திப்பு நடந்திருந்தால் விளக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்."

இதற்கிடையில், தள அனுமதி அனுப்பப்பட்டதும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தாக்க ஆய்வைக் கோரியது. "அமையவுள்ள ஓசூர் விமான நிலையம், பெங்களூரு அல்லது சேலம் விமான நிலையப் போக்குவரத்தைப் பாதிக்குமா எனக் கண்டறிய இந்த ஆய்வு கேட்கப்பட்டுள்ளது," என ஒரு அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தது.

சந்திரபாபு நாயுடு காரணம்?

மத்திய அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்ததற்கு HAL வான்வெளிப் பிரச்சனை மற்றும் பெங்களூர் விமான நிலையத்தின் 150 கி.மீ. சுற்றளவு விதி ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்பட்டன. ஆனால் இதற்கு பின் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இருக்கலாம் என்றும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.

மத்திய விமானத்துறை அமைச்சர் கின்ஜரபு ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும், ஆந்திராவின் குப்பம் விமான நிலைய திட்டம் கிருஷ்ணகிரி அருகே இருப்பதாலும், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஓசூர் விமான நிலையத்தை தடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஓசூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு எதிராக சதி

இது ஓசூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.ஓசூர் விமான நிலையத்திற்கு பலமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளுக்காக HAL கட்டுப்படுத்தும் வான்வெளியே பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் மத்திய விமானத்துறை அமைச்சர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும், மத்திய பாஜக ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிக பலம் இருப்பதாலும் அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக ஓசூர் புறக்கணிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆந்திர பிரதேசம் பிளான்

அவருக்கு முக்கிய செல்வாக்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. பெங்களூருவின் முழுத் திறன் எட்டப்பட்ட பின்னரே 150 கி.மீ விதி தளர்த்தப்படும் என அமைச்சர் சமீபத்தில் விளக்கினார். விமர்சகர்கள் விமான போக்குவரத்துறை அமைச்சர், தமிழகத் தேவைகளை விட ஆந்திராவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகப் விமர்சனங்களை வைக்கின்றனர்.

ஆந்திரா, 1,250 ஏக்கரில், இரண்டு கட்டங்களாக குப்பம் விமான நிலையத்தை 2027-க்குள் இயக்கத் திட்டமிட்டுள்ளது. பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதே இதன் நோக்கம். ஓசூரிலிருந்து 70-80 கி.மீ தூரத்தில் எல்லையின் மறுபுறம் அமைந்துள்ள இது, கிருஷ்ணகிரி வளர்ச்சியை தடுக்கும். முதல்வர் நாயுடு, மத்திய விமானத்துறை அமைச்சருடன் சமீபத்தில்தான் அந்த இடத்தை ஆய்வு செய்தார்.

ஆந்திராவின் எல்லை விமான நிலையம் ஓசூரின் பொருளாதார வேகத்தைத் திசைதிருப்பி, குப்பத்தில் வளர்ச்சிக்கு உதவலாம் என்பதால் சந்திரபாபு நாயுடு இதற்கான முயற்சிகளில் வேகம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+