அதிமுக துண்டுடன் ஒசூர் கோயிலில் சசிகலா வழிபாடு.. கொடியை பறித்தாச்சு.. துண்டை என்ன செய்ய முடியும்?
ஒசூர்: காரில் பொருத்தப்பட்ட அதிமுக கொடி பறிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் அதிமுக துண்டுஅணிந்து கொண்டு ஒசூர் மாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.
Recommended Video
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் கடந்த ஒரு வார காலம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

பொருத்தப்பட்ட கார்
இந்த நிலையில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா பண்ணை வீட்டிலிருந்து புறப்பட்டார். இதனிடையே தமிழக எல்லையில் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்தவுடன் சசிகலாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த கொடி அகற்றப்பட்டது.

கார் தடுத்து நிறுத்தம்
பின்னர் அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் இருந்து கொடி அகற்றப்பட்டதை அடுத்து அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட மற்றொரு காரில் பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் ஒசூர் அருகே அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதிமுக துண்டு
பின்னர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஒசூரில் உள்ள பிரபல மாரியம்மன் கோயிலுக்கு சசிகலா சென்றார். அங்கு அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவர் தனது கழுத்தில் அதிமுக துண்டை அணிந்திருந்தார்.

காவல் துறை
காரில் இருந்த அதிமுக கொடியை பறித்த காவல்துறை இவர் கழுத்தில் அணிந்திருக்கும் அதிமுக துண்டை என்ன செய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கோயிலில் இருந்து வெளியே சசிகலா தொண்டர்களை பார்த்து கையசைத்தார். சசிகலா முதல்வராக வேண்டும் என அமமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications