தெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்.. சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றிய பகீர் கும்பல்
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 கள்ள நோட்டுகள் மற்றும 7 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்தனர்.
கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்திப்பள்ளியில் ஒரு கும்பல் ரூ.80 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்தது
இதற்காக 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்ட அந்தக் கும்பல், மேலும் கீழும் அசல் நோட்டுகளை வைத்து பண்டல்களைத் தயார்செய்து அவற்றை விடியோ எடுத்து, பொதுமக்களிடம் மோடிசடியில் ஈடுபட்டுள்ளது.

சிக்கினார் ஆசாமி
இது தொடர்பாக கம்மம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்திப்பள்ளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர், ஒருவரை ஏமாற்றி கள்ள நோட்டுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வீட்டில் சோதனை
அப்போது தான் அந்த நபர் தாங்கள் மாதர் என்பவரது தலைமையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக போலீசுக்கு தெரிவித்தார். அந்த ஆசாமி கொடுத்த தகவலின் பேரில் ஒரு வீட்டை போலீசார் சோதனை நடத்தினர்.

7 கோடி கள்ள நோட்டு
அங்கு சுமார் 7 கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய கணிகள் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

100 கோடி கள்ளநோட்டு
இதையடுத்து மாதர் தலைமையிலான 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கம்மம் மாவட்டம் மன்சூரு மண்டலத்தில் உள்ள மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய 500, மற்றும் ரூ1000 கள்ள நோட்டுக்களை ஏற்கனவே அச்சிட்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

6பேரிடம் விசாரணை
இதனால் அங்குசென்ற போலீசார் அந்த வீட்டில் இருந்த கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மாதர் தலைமையிலான கும்பல் இதுவரை எவ்வளவு பேரிடம் எத்தனை கோடி ரூபாய் இது போன்று ஏமாற்றி புழக்கத்தில் விட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications