ஆந்திராவில் 37 தமிழர்கள் கைது.. செம்மரம் கடத்தியதாக குற்றச்சாட்டு!
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 37 தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 37 தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நெல்லூர், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக இந்த 37 தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை மற்றும் அதன் அருகாமை பகுதியை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட சிலர் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் நெல்லூர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வாய்ப்புள்ளது. 2015ல் ஆந்திராவில் 20 தமிழர்கள் செம்மரம் கடத்தியதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications