தடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணி நேரத்திலேயே சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணி நேரத்திலேயே சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான அந்த சுகாதாரப் பணியாளருக்கு நேற்று காலை 11.30 மணிக்கு நிர்மல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதிகாலை 5.30 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், அவரது உயிரிழப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, விரைவில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சிறப்புக் குழு, இந்த உயிரிழப்பை ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications