அமித்ஷா பிரகடனம் செய்த இறுதி யுத்தம்.. தெலுங்கானாவில் கடும் சண்டை- 6 மாவோயிஸ்டுகள் அழித்தொழிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பத்ராரி கொத்தகுடெம் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதலில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாகி உள்ளது.
நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டில், 40 ஆண்டுகளில் முதல் முறையாக, இடதுசாரி வன்முறையால்- மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழே குறைந்தது. 2010-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், அதாவது 1005 என பதிவான நிலையில், 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 138 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற இடதுசாரி தீவிரவாதம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது என்று கூறினார். வலுவான உத்தி, சமரசமற்ற அணுகுமுறையுடன் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடித் தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களது சடலங்கள் கைப்பற்றப்பட்டு தண்டேவடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஆந்திரா, தெலுங்கானாவிலும் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதல் சில மணிநேரங்கள் நீடித்தன. இம்மோதலில் மொத்தம் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி இருவர் படுகாயமடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications