Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷா பிரகடனம் செய்த இறுதி யுத்தம்.. தெலுங்கானாவில் கடும் சண்டை- 6 மாவோயிஸ்டுகள் அழித்தொழிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பத்ராரி கொத்தகுடெம் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதலில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாகி உள்ளது.

நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டில், 40 ஆண்டுகளில் முதல் முறையாக, இடதுசாரி வன்முறையால்- மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழே குறைந்தது. 2010-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், அதாவது 1005 என பதிவான நிலையில், 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 138 ஆக குறைந்துள்ளது.

maoists telangana

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற இடதுசாரி தீவிரவாதம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது என்று கூறினார். வலுவான உத்தி, சமரசமற்ற அணுகுமுறையுடன் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடித் தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களது சடலங்கள் கைப்பற்றப்பட்டு தண்டேவடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஆந்திரா, தெலுங்கானாவிலும் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

maoists telangana

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

maoists telangana

மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதல் சில மணிநேரங்கள் நீடித்தன. இம்மோதலில் மொத்தம் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி இருவர் படுகாயமடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

maoists telangana
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+