இதுவும் எமோஷனல்தான்.. அதுக்காக உண்மைக்குப் புறம்பா மாற்றி சொல்லலாமா?.. வைரல் படம் குறித்த உண்மை இதோ!
Recommended Video
ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் ஒரு வயது குழந்தை அவரது ஆளுயர புகைப்படத்தை தனது முதல் பிறந்தநாள் அன்று தழுவுவது போன்ற உருக்கமான காட்சிகள் சமூகவலைதளங்களில் பொய்யாக பரப்பப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ராணுவ வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தும் தீவிரவாதி ஒருவன் ஒரு குறிப்பிட்ட ராணுவ வாகனத்தில் வெடிப்பொருள்களுடன் கூடிய காருடன் மோதினான்.
இந்த சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில் நெஞ்சை உருக்கும் ஒரு காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

நெஞ்சை உருக்கும் காட்சிகள்
அதாவது ஒரு வீட்டில் ஒரு ஆளுர புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு கீழ் ஒரு பெண்ணும் ஒரு சிறிய குழந்தை இருக்கின்றனர். அந்த குழந்தை அந்த புகைப்படத்தை தொட்டு பார்க்கும் காட்சிகள் இருக்கின்றன. அந்த படத்தில் இருப்பவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் என்றும் அவரது குழந்தை தனது முதல் பிறந்தநாளையொட்டி தந்தையை தடவி பார்க்கிறது என்றும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் என வைரலாகி வருகிறது.

ராணுவ வீரர்
இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோமேயானால் இந்த புகைப்படத்திற்காக நெட்டிசன்கள் சொல்லப்படும் காரணம் பொய்யானது. தற்போது உண்மைக்கு புறம்பாக சில விஷயங்கள் பொய்யாக பரப்பப்பட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. அதாவது படத்தில் இருப்பவர் சிஆர்பிஎஃப் வீரரும் அல்ல. அந்த படத்திற்கு அருகில் இருக்கும் குழந்தை ராணுவ வீரரின் குழந்தையும் அல்ல.

பரிசோதனை
அந்த படத்தில் இருப்பவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனே. இவர் வேறு ஜாதியை சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் தந்தை பிரனேவை கொல்ல திட்டமிட்டார். இதையடுத்து கர்ப்பிணியான அம்ருதாவை கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு வெளியே வந்தனர்.

குழந்தை
அப்போது பிரனேவை அம்ருதாவின் தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் வெட்டி கொன்றனர். மனைவி கண் முன்பே பிரனே உயிரிழந்தார். இதையடுத்து அம்ருதாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. புகைப்படத்தில் தன் தந்தை இனி வரவேமாட்டார் என்றும் அறியாமல் தொட்டு பார்க்கும் இந்த குழந்தையின் செய்கையும் மனதை உருக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications