Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

32 அடி பள்ளம்.. தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பஸ்.. துடிதுடித்த பயணிகள்.. 7 பேர் பலி.. ஆந்திராவில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அரசு ஏசி சொகுசு பஸ் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சாகர் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி - பொதிலி சாலையில் அரசு ஏசி சொகுசு பஸ் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலை ஓரம் இருந்த சாகர் என்ற கால்வாயில் பஸ் கவிழ்ந்தது. சுமார் 32 அடி ஆழமுள்ள அந்த கால்வாயில் பஸ் கவிழ்ந்ததால் உள்ளே இருந்த பயணிகள் படுகாயமடைந்து அலறி துடித்தனர்.

Accident in Andhra Pradesh government AC bus overturned in the canal - 7 passengers lost their lives

இதையடுத்து பஸ் விபத்து குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். எனினும் இந்த பஸ் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றதாகவும், அப்போது தான் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் பயணிகளுடன் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 7 பயணிகள் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+