சகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு குமரி அனந்தன் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் எம்பி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்: முன்னாள் எம்பி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் இன்று காலமானார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.

வசந்த குமாரின் மறைவை தொடர்ந்து அவரின் சகோதரர், முன்னாள் எம்பி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தம்பி வசந்த குமாரின் மரண செய்தியை கேட்டு குமரி ஆனந்தன் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக வசந்த குமார் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உருக்கமான இரங்கல் தெரிவித்து இருந்தார். தமிழிசை சௌந்தராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆவார்.












Click it and Unblock the Notifications