பாசம் காட்டி மோசம்! சில்லி சிக்கன் வாங்கி கொடுத்த கணவன்.. ஆசையாய் சாப்பிட்ட மனைவி பரிதாப பலி.. சோகம்
ஐதராபாத்: பீரோவில் வைத்த பணத்தை மனைவி திருடியததாக சந்தேகப்பட்டு கட்டிய மனைவி என்றும் கூட பாராமல் சிக்கன் வறுவலில் விஷத்தை தடவி கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் கோட்டே முக்கால் என்ற பகுதியை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் முடிந்தது. அனுமந்தராவின் தாயாரான சித்தேம்மா மற்றும் சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோருக்கும் மனைவி ஜோதிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது இவர்கள் இருவரும் தகராறு செய்து வந்தார்களாம். இந்த நிலையில், அனுமந்த ராவ் பீரோவில் வைத்து இருந்த பணம் திடீரன காணாமல் போய் இருக்கிறது. இதை தனது மனைவி தான் எடுத்து இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட அனுமந்தராவ், மனைவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால், மனைவி ஜோதியோ தான் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினார்.
சிக்கன் வறுவலில் விஷம்: எனினும், மனைவியின் வார்த்தையை நம்பாத அனுமந்தராவ் தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமந்தராவ் கையாண்ட யுக்திதான் கொடூரத்திலும் கொடூரம். அதாவது தனது மனைவியை கொல்ல வேண்டும் என்பதற்காகவே ஓட்டலில் சிக்கன் வறுவல் வாங்கியிருக்கிறார். அதில் விஷத்தை தடவி மனைவி ஜோதியிடம் ஆசையாய் வாங்கி கொண்டு வந்தது போல கொடுத்துள்ளார்.
கணவர் தன் மீதான பாசத்தில் வாங்கி வந்து இருக்கிறாரே என்று பெருமை பட்டுக்கொண்ட மனைவி ஜோதியோ, கணவரின் விஷமத்தனம் தெரியாமல் சிக்கன் வறுவலை சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே ஜோதிக்கு வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜோதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி மனைவி சாவு: இதற்கிடையே, இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசாரும் ஜோதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் அனுமந்தராவ் சிக்கன் வறுவல் வாங்கி கொடுத்ததாகவும் அதை சாப்பிட்ட பிறகே தனக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஜோதியின் கணவர் அனுமந்தராவ், மாமியார் சித்தேம்மா மற்றும் கொழுந்தனார் கோடீஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சிக்கன் வறுவலில் விஷம் கலந்து கொடுத்து கணவனே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications