திடீரென எழும் "விசித்திரமான" கூச்சல்.. பீதியை கிளப்பும் மர்ம நோய்.. குழப்பத்தில் "எலுரு" மக்கள்!
ஆந்திராவின் எலுரு பகுதியில் மர்ம நோய் தாக்கி உள்ளது
ஹைதராபாத்: விசித்திரமான கூச்சலை எழுப்பி, அப்படியே மயங்கிவிழுந்து விடுகிறார்கள் ஆந்திராவின் எலுரு பகுதி மக்கள்.. இவர்களை பீடித்த நோய் என்னவென்றே தெரியாமல் டாக்டர்களும் விழிபிதுங்கி வருகிறார்கள்.
Recommended Video

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு பகுதியில் பொதுமக்கள் பலர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6-ம் தேதி முதலே அவர்களை ஒரு நோய் தாக்கி வருகிறது. இது என்ன நோய் என்று இன்னும்கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் வாந்தி வந்துள்ளது.. பிறகு வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது..

கூச்சல்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விசித்திரமான கூச்சலை எழுப்புகிறார்களாம்.. அது ஓலமிடுவது போல இருக்கிறதாம்.. பிறகு அப்படியே மயங்கி கீழே விழுந்து விடுகின்றனர். இவர்கள்தான் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிட்டத்தட்ட 600 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. 330 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. ஸ்ரீதர் என்ற 45 வயது நபர் இந்த நோயால் இறந்தே விட்டார்.

சாப்பாடு
கடந்த 6-ம் தேதியில் இருந்தே இப்படி ஒரு பீதி எலுரு பகுதியில் நிலவுகிறது.. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எங்குமே வெளியில் செல்லவில்லை.. அதாவது வெளியூருக்கும் போகவில்லை, நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவுமில்லை.. அதனால் சாப்பாட்டு பிரச்சனையால் இந்த பாதிப்பு வந்ததாக சொல்ல முடியாது.. அதேசமயம், இது என்ன நோய் என்று டாக்டர்களே மண்டையை பிய்த்து கொண்டு உள்ளனராம்.

எபிலெப்சி
அநேகமாக எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள்... அதனால், ஸ்பெஷல் மெடிக்கல் டீம் என்று எலுருவிற்கு சென்றுள்ளனர்.. அவர்கள்தான் இது சம்பந்தமான விசாரணை மற்றும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இப்போதைக்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை நடந்து வருகிறது.. அவர்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசி ஆறுதல் சொன்னார்.. டாக்டர்களிடம் அவர்களின் நிலை பற்றி கேட்டறிந்தார்..

தண்ணீர்
ஒருவேளை அவர்கள் குடித்த தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து ஏதேனும் கலந்திருக்கலாம் என்கிறார்கள் எய்ம்ஸ் டாக்டர்கள்.. இதையடுத்து, விஜயவாடாவில் அந்த பகுதியில் உள்ள நீரை எடுத்து டெஸ்ட் செய்தனர்.. அதில், குடிநீரில் டைகுளோரோ டைபீனைல் டை குளோரோ ஈத்தேன் என்ற வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிசல்ட்
பொதுமக்கள் குடித்த அந்த நீரில் கலரும் மாறியிருந்ததாம்.. வீட்டில் குழாயில் வரும் தண்ணீரும் நிறம் மாறி வந்திருக்கிறது.. இருந்தாலும், அடுத்தகட்ட ஆய்விற்கு பரிசோதனைகள் சென்றுள்ளன.. அந்த ரிசல்ட்டும் வந்தால்தான், இதுகுறித்து முழுமையாக தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications