வெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாப மரணம்.. ஆந்திராவில் பெரும் சோகம்!
வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது
Recommended Video
ஹைதராபாத்: வெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே கீழே விழுந்து இறந்துவிட்டார்.. வெங்காயம் வாங்க வரிசையில் கால்கடுக்க காத்து நின்றபோது நடந்த இந்த சோகம் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
வெங்காயத்தை நினைத்தாலே, இனம் புரியாத கலக்கம் வந்து கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை நம்மை மிரள வைத்து வருகிறது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், ஆந்திரா முழுவதும் உழவர் சந்தைகளில் ரூ.25-க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் அரசு மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அதனால் அம்மாநில உழவர் சந்தைகளில் சாமானியர் முதல் உயர்தர குடி வரை கியூவில் வந்து நின்றுவிடுகின்றனர்.. எல்லாரும் வரிசையாக நின்று தங்களுக்கு உரிய வெங்காயத்தை வாங்கி கொண்டு போகிறார்கள்.. இதனால் உழவர் சந்தைகளில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கியூ நிற்பதை காண முடிகிறது.
அப்படித்தான், கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகர் உழவர் சந்தையிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இதில் ஒருவர்தான் சாம்பையா.. வெங்காயம் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு வந்துவிட்டது. அதனால் நெஞ்சை பிடித்து கொண்டே அப்படியே கீழே மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து பதறிய பொதுமக்கள், சாம்பையாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனாலும், ஆஸ்பத்திரி கொண்டு போவதற்குள் சாம்பையா உயிர் பிரிந்தது. வெங்காயம் வாங்க போனவர், பிணமாகி கிடப்பதை கண்டு, குடும்பத்தினர் கதறி துடித்து அழுதனர். இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications