வெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாப மரணம்.. ஆந்திராவில் பெரும் சோகம்!
வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது
Recommended Video
ஹைதராபாத்: வெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே கீழே விழுந்து இறந்துவிட்டார்.. வெங்காயம் வாங்க வரிசையில் கால்கடுக்க காத்து நின்றபோது நடந்த இந்த சோகம் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
வெங்காயத்தை நினைத்தாலே, இனம் புரியாத கலக்கம் வந்து கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை நம்மை மிரள வைத்து வருகிறது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், ஆந்திரா முழுவதும் உழவர் சந்தைகளில் ரூ.25-க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் அரசு மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அதனால் அம்மாநில உழவர் சந்தைகளில் சாமானியர் முதல் உயர்தர குடி வரை கியூவில் வந்து நின்றுவிடுகின்றனர்.. எல்லாரும் வரிசையாக நின்று தங்களுக்கு உரிய வெங்காயத்தை வாங்கி கொண்டு போகிறார்கள்.. இதனால் உழவர் சந்தைகளில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கியூ நிற்பதை காண முடிகிறது.
அப்படித்தான், கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகர் உழவர் சந்தையிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இதில் ஒருவர்தான் சாம்பையா.. வெங்காயம் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு வந்துவிட்டது. அதனால் நெஞ்சை பிடித்து கொண்டே அப்படியே கீழே மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து பதறிய பொதுமக்கள், சாம்பையாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனாலும், ஆஸ்பத்திரி கொண்டு போவதற்குள் சாம்பையா உயிர் பிரிந்தது. வெங்காயம் வாங்க போனவர், பிணமாகி கிடப்பதை கண்டு, குடும்பத்தினர் கதறி துடித்து அழுதனர். இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications