Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி வரட்டும்..நாங்க போக மாட்டோம்! இன்று தெலுங்கானா வரும் பிரதமர் -புறக்கணிக்கும் கேசிஆரின் பிஆர்எஸ்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: இன்று பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வருகை தரும் நிலையில் அவரது பயணத்தை புறக்கணிக்கப்போவதாக ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்து உள்ளது.

தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் அங்கு மத்திய அரசின் ரூ.6,100 கோடி மதிப்புடைய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அம்மாநிலத்துக்கு செல்கிறார்.

BRS has announced that it will boycott PM Narendra Modis visit to Telangana today

பொதுவாக ஒரு மாநிலத்துக்கு பிரதமர் செல்லும்போது அம்மாநில முதலமைச்சர் விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்பது மரபாக இருந்து வருகிறது. ஆனால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கப்போவது இல்லை என பிஆர்எஸ் கட்சி அறிவித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு பயணித்தபோதும் அவரை சந்திரசேகர் ராவ் வரவேற்கவில்லை. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்வுகளிலும் சந்திரசேகர் ராவ் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முன்பாக 4 முறை பிரதமர் மோடி தெலுங்கானா சென்றபோதும் அவரை வரவேற்காமல் புறக்கணித்து உள்ளார் சந்திரசேகர் ராவ்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவ், எங்கள் கட்சி தெலுங்கானா வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தை புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறது. பிரதமரானதில் இருந்தே மோடி தெலுங்கானாவுக்கு எதிரான மனநிலையிலேயே இயங்கி வருகிறார்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தை பிரித்தபோது பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், பல வாக்குறுதிகளை அவர்கள் செயல்படுத்தவில்லை. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அவர் தொடங்கி வைத்த ரயில் பெட்டி தயாரிப்பு தெலுங்கானாவுக்கு வரவேண்டியது. ஆனால், அவர் தெலுங்கானாவில் ரூ.521 கோடியில் ரயில் பெட்டி தயாரிக்கும் ஆலையை அறிவித்தார்.

தெலுங்கானா மாநில நலன் கருதி பி.ஆர்.எஸ் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு உரிய அனுமதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தெலுங்கானா என்ற குழந்தையை உருவாக்கிவிட்டு தாயான ஆந்திராவை கொன்றுவிட்டதாக பிரதமர் மோடி நமது மாநிலம் பற்றி அவதூறாக பேசி உள்ளார். அவரது தெலுங்கானா விரோத போக்கை கண்டித்து வருகையை புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறோம்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+