Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த கட்சிக்காரங்களே என்னை நம்ப மாட்றாங்களே.. ஐயோ! கேக் முன் அமர்ந்து ஓவென அழுத டிஆர்எஸ் எம்எல்ஏ

சர்ச் பாதிரியாரின் பிறந்தநாள் விழாவில் கேக் முன்பு கதறி அழுத பிஆர்எஸ் எம்எல்ஏ ராஜய்யா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை நினைத்து பிறந்தநாள் விழாவில் கேக் முன்பு உட்கார்ந்து கொண்டு பிஆர்எஸ் எம்எல்ஏ ராஜய்யா அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைக்காலமாக சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்எல்சிக்கள் செய்வது எல்லாம் சிரிப்பை வரவழைக்கின்றன. அந்த வகையில் தேர்தல் என வந்துவிட்டால் துணி துவைத்து கொடுப்பது, அயர்ன் செய்து கொடுப்பது, பரோட்டா சுட்டு கொடுப்பது.. இவ்வளவு ஏன் தெலுங்கானாவில் தேர்தலின் போது கக்கா போன குழந்தைக்கு ஒரு வேட்பாளர் நான்தான் கழுவுவேன் அடம்பிடித்து கழுவிய சம்பவம் நடந்துள்ளது.

அது போல் சில மாநிலங்களில் சில அரசியல்வாதிகள் செய்யும் சம்பவங்கள் காமெடியை வரவழைக்கின்றன. அந்த வகையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏ ஒரு பிறந்தநாள் விழாவில் கேக் முன்பு உட்கார்ந்து அழும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேவாலயம்

தேவாலயம்


ஒரு தேவாலயத்தின் பாதிரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு எம்எல்ஏ ராஜய்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையேற்று அவரும் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு சென்ற எம்எல்ஏ ராஜய்யா திடீரென கேக் முன்பு உட்கார்ந்து கொண்டு அழத் தொடங்கினார். அவருடன் இருந்தவர்கள் அவரை தேற்ற முயற்சித்தனர்.

தைரியம்

தைரியம்

பின்னர் என்னெவென கேட்டதற்கு தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள தனக்கு தைரியம் இல்லை என கூறி அழுதார். சிலர் தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருகிறார்கள், முடிந்தால் இந்த குற்றச்சாட்டுகளை உடைத்துக் கொண்டு நிரூபித்து காண்பி என எனக்கு சவால் விடுக்கிறார்கள். என்னால் அவர்களை சமாளிக்க முடியவில்லை என கூறி அழுதார். மேலும் நான் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் கூறினார்.

 கான்பூர் தொகுதி எம்எல்ஏ

கான்பூர் தொகுதி எம்எல்ஏ

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டேஷன்கான்பூர் எம்எல்ஏ தடிகொண்டா ராஜய்யா ஜானகிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவி நவ்யாவிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொது கூட்ட மேடையில் நவ்யாவின் தோளில் கை போட்ட படி ராஜய்யா நின்றிருந்தார். தன் மீதான கையை எடுக்க வேண்டும் என்றும் தன்னிடம் ஒழுங்காக நடந்து கொள்ளுமாறும் நவ்யா பலமுறை அறிவுறுத்தியும் ராஜய்யா கேட்கவில்லை என்றார். மேலும் தனக்கு போன் செய்து தன்னை தனியாக வருமாறும் அழைத்தார் என பஞ்சாயத்து தலைவி புகார் கூறியிருந்தார்.

கிராம பஞ்சாயத்து

கிராம பஞ்சாயத்து

நான் அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளாததால் கிராம பஞ்சாயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பல தொல்லைகளை ராஜய்யா கொடுக்கிறார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை என நவ்யா குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜன்கோன் மாவட்டத்தில் உள்ள சில்பூரில் உள்ள பள்ளிக்கு ராஜய்யா சென்றிருந்தார். அங்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் விழாவில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாட்டை ராஜய்யாவுக்கு தனது கைகளால் ஊட்டி விட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு விளக்கமளித்த எம்எல்ஏ, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவர் எனக்கு உணவு ஊட்டிவிட விரும்பினார். அதனால் அந்த மாணவியை எனது மகளாக கருதி உணவு ஊட்ட அனுமதித்தேன். இந்த உண்மை தெரியாத சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள் என ராஜய்யா விளக்கமளித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+