சீனா மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த தைரியம் இருக்கா? அமித்ஷாவுக்கு “சேலஞ்ச்” செய்த அசதுத்தீன் ஒவைசி
ஐதராபாத்: தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த தயாரா என்று ஐதராபாத் எம்பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்து இருக்கிறார்.
கடந்த வாரம் தெலுங்கானாவுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "டிஆர்எஸ் என்ற கார் தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி செய்கிறது. ஆனால் ஒவைசியின் கைகளில் அதன் ஸ்டீயரிங் உள்ளது.

மஜ்லிஸ் கட்சியின் கைகளில் ஸ்டியரிங் இருக்கும் அரசு தெலுங்கானாவில் ஒருகாலும் இயங்க இயலாது. மஜ்லிஸ் கட்சியை பார்த்து நாங்கள் அஞ்சவில்லை. பிஆர்எஸ் கட்சி மஜ்லிஸ் கட்சிக்கு முக்கியம். அது முக்கியம் கிடையாது. மக்களுக்காக தெலுங்கானா அரசு செயல்பட வேண்டும். ஒவைசிக்காக செயல்பட கூடாது." என்று விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசதுத்தீன் ஒவைசி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். அவர் உரையாற்றுகையில், "கோயில்களுக்கு பல கோடிக்கணக்கான நிதியை வழங்க தெலுங்கானா மாநில அரசு ஒப்புதல் வழங்கி வருகிறது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ காரின் பிடி எனது கையில் இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். என் கைகளில் ஸ்டீயரிங் இருந்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? சர்ஜிகல் ஸ்டிரைக்கை பழைய நகரில் நடத்த உள்ளதாக சொல்கிறீர்கள். இதில் அவருக்கு என்ன வேதனை உள்ளது? உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனாவின் மீது சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்த இயலுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த பண்டி சஞ்சை, "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்யா வாக்களர்கள் இல்லாமல் ஐதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்யா வாக்களர்களின் உதவியுடன் ஒவைசி வெற்றி பெற முயற்சிக்கிறார்.
தேர்தலில் நாம் வென்ற பிறகு, அந்தப் பழைய நகரத்தின் மீது நாம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்துவோம்" என்று பேசி இருந்தார். இந்த நிலையில் அதை சுட்டிக்காட்டி அமித்ஷாவுக்கு அளித்த பதிலில் சீனா மீது சர்ஜிகல் தாக்குதலை நடத்துங்கள் என்று ஒவைசி சவால் விடுத்துள்ளார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications