தெலுங்கானாவில் மாஸ் காட்டும் காங்கிரஸ்.. பரிதாப நிலையில் பாஜக.. Democracy Times கருத்துக் கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானாவில் நாடாளுமன்ற தேர்தல் தற்போது நடந்தால், சந்திரசேகர ராவ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்து காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று Democracy Times Network நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. ஏனென்றால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால் தெலுங்கானாவில் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தெலுங்கானாவில் தற்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.
காங்கிரசுக்கு வாய்ப்பு: இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களை பெற வாய்ப்பு இருப்பதாக Democracy Times Network நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று Democracy Times Network நிறுவனம் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. இதேபொல் பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று 23 சதவீத வாக்குகளை பெறும் என்று Democracy Times Network கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்:
மொத்த தொகுதிகள் - 17
காங்கிரஸ் - 08 (37 சதவீத வாக்குகள்)
பிஆர்எஸ் - 06 (34 சதவீத வாக்குகள்)
பாஜக - 02 (23 சதவீத வாக்குகள் )
மற்றவை: 1 (6 சதவீத வாக்குகள் ).












Click it and Unblock the Notifications