ஜெ. பாணியில் காங். அதிரடி! தெலுங்கானா புதிய சபாநாயகர் 'தலித்'- யார் இந்த பிரசாத் குமார்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் புதிய சபாநாயகராக தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரசாத் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சபாநாயகர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, முதல்வராக ரேவந்த் ரெட்டியை அறிவித்தது. ரேவந்த் ரெட்டி தலைமையில் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவருக்கும் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போது தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டசபையின் இடைக்கால சபாநாயாராக அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டார். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ, 6 முறை தேர்தலில் வென்றவர் அக்பருதீன். ஓவைசியின் சகோதரர். ஆனால் அக்பருதீன் ஓவைசி, இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சர்ச்சைகளில் அக்பருதீன் ஓவைசி சிக்கியவர் என்பதால் இந்த எதிர்ப்பை தெரிவித்தது பாஜக. அக்பருதீன் ஓவைசி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய முடியாது என நேற்று பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பும் செய்தனர். இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசிக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபையின் புதிய சபாநாயகர் பிரசாத் குமார் என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகரால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தலித் என்பதால் ஆளும் கட்சியினராலே புறக்கணிக்கப்பட்டார் என்ற காரணத்துக்காகவே அதிமுக சீனியர் 'தனபால்' உணவுத் துறை அமைச்சர், சபாநாயகர் என ஜெயலலிதாவால் அரியணையில் உட்கார வைக்கப்பட்டார். இப்போது தெலுங்கானாவில் காங்கிரஸும் இதே பார்முலாவை பின்பற்றி உள்ளது. ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் பதவி தலித் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள புதிய சபாநாயகர் வேட்பாளர் பிரசாத் குமார் சர்ச்சைகளில் சிக்காதவர். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் கிரண்குமார் ரெட்டி முதல்வராக இருந்த போது அமைச்சர் பதவி வகித்தவர். 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார் பிரசாத் குமார். ஆனால் இந்த தேர்தலில் தம்மை ஏற்கனவே தோற்கடித்த பிஆர்எஸ் கட்சியின் மேதுகு ஆனந்த்தை 12,893 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பிரசாத் குமார்.
தெலுங்கானா தனி மாநிலம் உருவான பின்னர் மதுசூதனா சாரி முதல் சபாநாயகராக இருந்தார். 2018-2023 -ல் ஶ்ரீவாஸ் ரெட்டி சபாநாயகராக பதவி வகித்தார். தற்போது 3-வது சபாநாயகராக பிரசாத் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications