ஜெ. பாணியில் காங். அதிரடி! தெலுங்கானா புதிய சபாநாயகர் 'தலித்'- யார் இந்த பிரசாத் குமார்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் புதிய சபாநாயகராக தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரசாத் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சபாநாயகர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, முதல்வராக ரேவந்த் ரெட்டியை அறிவித்தது. ரேவந்த் ரெட்டி தலைமையில் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவருக்கும் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போது தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டசபையின் இடைக்கால சபாநாயாராக அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டார். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ, 6 முறை தேர்தலில் வென்றவர் அக்பருதீன். ஓவைசியின் சகோதரர். ஆனால் அக்பருதீன் ஓவைசி, இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சர்ச்சைகளில் அக்பருதீன் ஓவைசி சிக்கியவர் என்பதால் இந்த எதிர்ப்பை தெரிவித்தது பாஜக. அக்பருதீன் ஓவைசி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய முடியாது என நேற்று பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பும் செய்தனர். இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசிக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபையின் புதிய சபாநாயகர் பிரசாத் குமார் என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகரால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தலித் என்பதால் ஆளும் கட்சியினராலே புறக்கணிக்கப்பட்டார் என்ற காரணத்துக்காகவே அதிமுக சீனியர் 'தனபால்' உணவுத் துறை அமைச்சர், சபாநாயகர் என ஜெயலலிதாவால் அரியணையில் உட்கார வைக்கப்பட்டார். இப்போது தெலுங்கானாவில் காங்கிரஸும் இதே பார்முலாவை பின்பற்றி உள்ளது. ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் பதவி தலித் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள புதிய சபாநாயகர் வேட்பாளர் பிரசாத் குமார் சர்ச்சைகளில் சிக்காதவர். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் கிரண்குமார் ரெட்டி முதல்வராக இருந்த போது அமைச்சர் பதவி வகித்தவர். 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார் பிரசாத் குமார். ஆனால் இந்த தேர்தலில் தம்மை ஏற்கனவே தோற்கடித்த பிஆர்எஸ் கட்சியின் மேதுகு ஆனந்த்தை 12,893 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பிரசாத் குமார்.
தெலுங்கானா தனி மாநிலம் உருவான பின்னர் மதுசூதனா சாரி முதல் சபாநாயகராக இருந்தார். 2018-2023 -ல் ஶ்ரீவாஸ் ரெட்டி சபாநாயகராக பதவி வகித்தார். தற்போது 3-வது சபாநாயகராக பிரசாத் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications