"இந்தியா" வுக்கு பிறகு.. இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது காங்கிரஸின் முதல் காரிய கமிட்டி கூட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காரிய கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், மறுசீரமைப்புக்கு பிறகு முதல்முறையாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மூத்த முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி , காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், செப்டம்பர் 16ஆம் தேதி முதல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆக்கப்பூர்வமாக தயாராவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 84 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தை மல்லிகார்ஜுன கார்கே தலைமையேற்று நடத்துகிறார். இதில் சோனியா, ராகுல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 4 மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அது போல் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி உருவான பிறகு முதல்முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டசபை தேர்தல் பாஜவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் அக்னிபரீட்சையாக விளங்கும்.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
10ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து.. அடுத்தாண்டு முதல் எக்ஸாம் டென்சன் இல்லை.. மாநில அரசு அறிவிப்பு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications