என்ன இது? ஆப்ரிக்காவில் இருந்து ஆந்திரா வந்தவர்களை காணவில்லை.. 30 பேர் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி
ஹைதராபாத்: தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 30 பேர் ஆந்திர பிரதேசத்தில் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இரண்டு பேரிடம் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரில் ஒரு மருத்துவர் இன்னொரு தென்னாப்பிரிக்க பயணி ஆகியோரிடம் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதுவரை உலகம் முழுக்க 30 நாடுகளில் அதிகாரபூர்வமாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

காணவில்லை
இந்த நிலையில்தான் ஆந்திராவில் இருக்கும் விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய விவர படிவங்களை நிரப்ப வேண்டும் என்று விதி உள்ளது. அதாவது எங்கிருந்து வருகிறார்கள். அடுத்த எங்கே செல்கிறார்கள். ஆந்திராவில் எங்கே தங்குவார்கள் என்று விவரங்களை வெளியிட வேண்டும். கடந்த இரண்டு நாட்களில் பலபேர் இப்படி வெளிநாடுகளில் இருந்து ஆந்திராவின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு வந்துள்ளனர்.

60 பேர்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதை சோதிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதில் 60 பேர் விஷாகப்பட்டினத்தில் தங்க போவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் விலாசம், போன் எண் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். இதில் 30 பேர் விஷாகப்பட்டினத்தில் எங்கே தங்கி உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

9 பேர்
ஆனால் மற்ற 30 பேர் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. 30 பேர் விஷாகப்பட்டினத்தில் எங்கே தங்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களின் போன் எண்களுக்கு போன் செய்தாலும் போன் செல்வது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கொடுத்த விலாசத்தை சோதனை செய்ததிலும் அது பொய்யான விலாசம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்கே
பொய்யான விலாசம் கொடுத்து இவர்கள் அதிகாரிகளை ஏமாற்றி உள்ளனர். ஓமிக்ரான் கொரோனா பரவும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எங்கே என்று தெரியவில்லை. இதில் 9 பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.
Recommended Video

ஆப்பிரிக்கா
அதிலும் 2 பேர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். ஒருவர் போட்ஸ்வானாவை சேர்ந்தவர். இவர்கள் எங்கே என்று தெரியவில்லை என்பதால் ஆந்திர பிரதேசத்தில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருக்கிறது. இவர்களை டிரேஸ் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications