ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது.. மருத்துவமனையில் அனுமதியான அன்றே கொரோனாவால் செய்தியாளர் பலி.. சோகம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதியான அன்றே கொரோனாவால் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் தற்போது தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டும் அங்கு 206 கேஸ்கள் ஏற்பட்டது. 10 பேர் பலியாகி உள்ளனர்.

அதேபோல் அங்கு இதுவரை 3496 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இதுவரை 123 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1500ஐ தாண்டிய கொரோனா .. சென்னையில் எகிறிய பாதிப்புதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1500ஐ தாண்டிய கொரோனா .. சென்னையில் எகிறிய பாதிப்பு

செய்தியாளர் மரணம்

செய்தியாளர் மரணம்

இந்த நிலையில் தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதியான அன்றே கொரோனாவால் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் பலியான இவர் அங்கு ஒரு பிரபல மீடியா ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்று காலைதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்ந்தார்.

எந்த இடம்

எந்த இடம்

ஹைதராபாத்தில் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் மதியமே கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். இவருக்கு 36 வயதுதான் ஆகிறது. இவருக்கு இதற்கு முன் உடலில் தசைகளை வலிமை இழக்க செய்யும் Myasthenia gravis என்ற குறைபாடு இருந்துள்ளது. அதேப்போல் இவருக்கு மூச்சு விடுவதில் சில வருடங்களாக பிரச்சனை இருந்துள்ளது.

மோசம்

மோசம்

இதனால்தான் இவருக்கு சிகிச்சை அளித்தும் பயன் அளிக்கவில்லை என்கிறார்கள். தெலுங்கானாவில் கொரோனா காரணமாக பலியாகும் முதல் செய்தியாளர் இவர்தான். இவர் மதன்னாபேட் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 8 மாதத்திற்கு முன்தான் திருமணம் ஆகியுள்ளது.கடந்த சில வாரங்கள் முன் இவரின் சகோரர் மற்றும் அவரின் மனைவி இருவரும் விபத்தில் பலியானார். அவர்களின் குழந்தையை இவர்தான் பார்த்துக் கொண்டார்.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்
    பெரும் சோகம்

    பெரும் சோகம்

    இந்த நிலையில் இவர் தற்போது பலியாகி உள்ளார். ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் சிலருக்கு கொரோனா வந்தது. அதன்பின் வரிசையாக 20க்கும் அதிகமான செய்தியாளர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் முதல் முறை செய்தியாளர் ஒருவர் கொரோனா காரணமாக அங்கு பலியாகி இருக்கிறார்.

    English summary
    Coronavirus: A Telugu reporter dies of Covid-19 who is just 34 years old in Hydrabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X