Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் திருமணம் செய்த துணை தாசில்தாரின் கணவர் ஆணவக்கொலை.. திருமணத்தன்று இரவே கொடூர சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் துணை தாசில்தாரின் கணவர், திருமணத்தன்றே கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சகோதரர்கள், அந்த நபரை அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணவக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபூடி கிராமத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். அதே கிராமத்தில் வசிக்கும் சந்தியா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவருமே பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. சந்தியாவும் சூரியபிரகாஷை காதலித்துள்ளார்.

Andhra pradesh honour killing

சந்தியா கோதாவரி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மண்டல வருவாய் அதிகாரி அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். சூரியபிரகாஷின் தந்தை அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சூரியபிரகாஷ் தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு சந்தியாவின் மூத்த சகோதரர் சந்திரபால் மற்றும் இளைய சகோதரர் கிரிபாபு ஆகியோர் சாதி வேறுபாடுகளைக் காரணம் காட்டி திருமணத்தை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று சந்தியாவும், சூரிய பிரகாஷும் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சந்தியா தனது சகோதரர்களுக்கு போனில் அனுப்பி உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த சந்தியாவின் சகோதர்கள், சந்தியாவிடம் ஆத்திரத்தோடு பேசியுள்ளனர். வெறி அடங்காத நிலையில், சூரிய பிரகாஷை கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.

திருமணமான புதுமண தம்பதி இரவில் துவாரபூடி கிராமத்தில் உள்ள மணமகனின் வீட்டிற்கு முதலிரவு கொண்டாடுவதற்காக வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாக துணிக்கடையை பூட்டி விட்டு இரவு வீட்டிற்கு வரும் அப்பாவின் வருகைக்காக சூரியபிரகாஷ் வீட்டின் வெளியே காத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தியாவின் சகோதரர்கள் பிரகாஷை மிகவும் கொடுரமாக கற்களை கொண்டு தாக்கினர்.

இதில் நிலைகுலைந்துபோன பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிருக்கு உயிராகக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரகாஷ், திருமணத்தன்றே தனது சகோதரர்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்ததை கண்டு சந்தியா கூச்சலிட்டு புலம்பி அழுத்துள்ளார்.

அதற்குள் ஒட்டுமொத்த கிராமமே அங்கு கூடிவிட்டது. குற்றவாளிகள் தப்பி ஓட முயன்ற நிலையில், அப்பகுதி மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் திருமணம் செய்து கொண்ட அன்றே, துணை தாசில்தாரின் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் செய்து கொண்ட சந்தியாவும், சூரியபிரகாஷும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+