Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளம்பரத்தால் தலைவலி! கர்நாடக காங். அரசிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..நடந்தது இதுதான்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு பத்திரிகையில் விளம்பரம் போட்டுள்ளதால், இது தேர்தல் நடத்தை விதி எனவும் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தெலுங்கானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

ec-issues-notice-to-congress-led-karnataka-govt-for-ads-in-telangana

எனினும், ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் காங்கிரஸ் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை மூன்றாவது முறையாக பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய சந்திரசேகர் ராவ் கட்சியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதி மீறல் அமலில் உள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநில பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கர்நாடக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதி மீறல் என்று பாஜகவும், ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

இந்த புகாரை ஏற்று கர்நாடக அரசின் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசின் முதன்மை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் விளக்கமும் கேட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் இந்த விளக்கத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

முன்னதாக தெலுங்கனாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையம், திடீரென ரிது பந்து திட்டத்தின் கீழ் நிதி உதவியை அளிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்க அறிவுறுத்தியது. இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் அறிக்கை வெளியிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு "ரிது பந்து" திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்துக்கு ரூ.5,000 பணம் வழங்கப்பட்டடு வருகிறது. நடப்பு ஆண்டில் அக்டோபர் - ஜனவரி பருவத்துக்கான தொகையினை வழங்குவதற்கு தெலங்கானா அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இருந்த போதிலும் தேர்தல் நடத்தை விதி நடைமுறைக்கு வந்த பிறகு இது குறித்து விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசிடம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த விதி முறை மீறப்பட்டு இருப்பதாக கூறி தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+