திருப்பதியில் தேவஸ்தான பேருந்தை ஆட்டையை போட்ட ஆசாமி.. சார்ஜ் தீர்ந்ததும் நிறுத்தி விட்டு ஓட்டம்
ஐதராபாத்: உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த திருப்பதியில் பக்தர்களுக்காக இயக்கப்படும் மின்சார பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். விடுமுறை நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மின்சார பேருந்துகள் தேவஸ்தானம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 10 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல் டீசலில் இயங்கும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பதியில் நேற்று இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மின்சார பேருந்தை இன்று அதிகாலை காணவில்லை. இதனால் பதறிப்போன அதிகாரிகள் காலை முதலே பேருந்து எங்கு உள்ளது என்று தேடி வந்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஎஸ் மூலம் தேடி வந்தனர். இதில் நாயுடுப்பேட்டை அருகே பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
திருப்பதியில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஓட்டிச்சென்றதும் பேருந்தில் சார்ஜ் தீர்ந்ததும் சாலையோரம் அப்படியே நிறுத்தி விட்டு தப்பி ஓடியதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த திருப்பதியில் இருந்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான பேருந்தையே மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தை திருடிச்சென்ற நபர் யார்? அவர் எதற்காக திருடிச்சென்றார்.. என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள டோல்கேட்டுகளிலும் உள்ள கேமராக்கள் மூலம் பேருந்தை ஓட்டிசென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டால்தான் அவர் எதற்காக திருடிச்சென்றார் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications