Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எக்ஸ்" செய்த விபரீத செயல்.. தெலங்கானாவில் பொறியியல் மாணவி தற்கொலை.. அதிர வைக்கும் பின்னணி

கடந்த சில மாதங்களாக தான் காதலித்து வந்த மாணவருடன் சுசித்ரா பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது சீனியர் மாணவர் ஒருவருடன் மாணவி சுசித்ரா அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது முன்னாள் காதலன் செய்த விபரீத செயலால் தெலங்கானாவில் பொறியியல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ராகிங் கொடுமையால் தெலங்கானாவில் ஒரு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சூழலில், அடுத்து ஒரு சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமான அவரது முன்னாள் காதலன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜூனியர் மாணவருடன் காதல்

ஜூனியர் மாணவருடன் காதல்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சுசித்ரா (22). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கும், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் காதிலிக்க தொடங்கினர். இதனால் அந்த மாணவருடன் சுசித்ரா நெருங்கி பழகியுள்ளார்.

சீனியர் மாணவருடன் பழக்கம்

சீனியர் மாணவருடன் பழக்கம்

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தான் காதலித்து வந்த மாணவருடன் சுசித்ரா பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது சீனியர் மாணவர் ஒருவருடன் மாணவி சுசித்ரா அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர்கள் இவ்வாறு பேசி பழகுவது மாணவியின் முன்னாள் காதலனான இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு பிடிக்கவில்லை.

அந்தரங்க புகைப்படங்கள்

அந்தரங்க புகைப்படங்கள்

இதனால் சுசித்ராவை பழிவாங்க முடிவு செய்த அந்த மாணவன், தன்னுடன் சுசித்ரா நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் கல்லூரியில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் சில தினங்களுக்கு முன்பு அனுப்பினார். இந்த விஷயம் மாணவி சுசித்ராவுக்கு தெரியவந்ததால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும், அவர் கடும் மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார்.

போலீஸ் வழக்கு பதிவு

போலீஸ் வழக்கு பதிவு

இந்த சூழலில், நேற்று இரவு தனது வீட்டில் மாணவி சுசித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், மாணவியின் கல்லூரிக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கூறிய விஷயங்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சுசித்ராவின் அந்தரங்க புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பிய மாணவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+