எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் நோக்குடன் எக்ஸிட் போல் வெளியீடு: மொய்லி குற்றச்சாட்டு
ஹைதராபாத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான அனைத்து கட்ட வாக்குப்பதிவும் கடந்த 19ந் தேதி நிறைவுற்றது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே சாதகமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,"தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலமாக பங்கு சந்தையை ஏற்றம் பெற வைக்க முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக தெரிகிறது.
மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பதற்கான முயற்சியாக இருக்கும். உண்மையில் கள நிலவரத்தை இந்த கருத்துக் கணிப்புகள் எதிரொலிப்பதாக இல்லை.
இந்த கருத்துக் கணிப்புகளை நடத்திய நிறுவனங்களே இப்போது பல்வேறு தவறுகள் இருப்பதாக தெரிவித்து பின்வாங்கி இருக்கின்றன. மேலும், கருத்துக் கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல் உள்நோக்கம் கொண்டது.
இந்த கருத்துக் கணிப்புகள் பங்கு சந்தை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தி, பலர் ரூ.4.5 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் பயன் பெறுவதற்கான வழிமுறையாகவே தெரிகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிய பின்னர் பங்குச் சந்தை தடாலடியாக ஏற்றம் பெற்றதுடன், மும்பை பங்குச் சந்தை 1,422 புள்ளிகளை தொட்டது. இதனால், முதலீட்டு மதிப்பு ரூ.5.33 லட்சம் கோடியாக உயர்ந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மோடிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு," எங்களுக்கு பொது எதிரி மோடி. தேசிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத பெரும்பாலான கட்சிகள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன. அவர்கள் பாஜகவுடன் இணைய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியிலிருந்து பிரதமரை தேர்வு செய்வது பெரிய சிரமம் இருக்காது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் பதவியை விட்டுத் தருமா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிவுக்கு பின்னர் அ்துகுறித்து நாளை பார்க்கலாம், என்றும் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications