கேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்
மீண்டும் கேசிஆர் ஆட்சியை பிடிப்பார் என கூறப்படுகிறது.
ஹைதராபாத்: முன்கூட்டியே சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துவது என்று கே. சந்திரசேகர ராவ் எடுத்த முடிவு அவருக்கு சாதகமாகவே வந்துள்ளது என்பது எக்சிட் போல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. தெலுங்கானாவில் மீண்டும் கேசிஆரே ஆட்சியைப் பிடிப்பார் என்று பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகளும் கூறியுள்ளன.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதுற்குள்ளாகவே அதனைக் கலைக்கும் முடிவை எடுத்தார் கேசிஆர்.
இதனால் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியம் ஏற்பட்டது. அவர் பெரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அனைவரும் கணித்தனர். இது பாதகமாக போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

குஷியில் உள்ளனர்
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கேசிஆருக்கே மீண்டும் வெற்றி என்று எக்சிட் போல் கணிப்புகள் கூறியுள்ளன. மொத்தம் வந்த 11 எக்சிட் போல்களில் பாதிக்கும் மேலானவை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்துள்ளன. இது கேசிஆர் தரப்பை குஷிப்படுத்தியுள்ளது.

பாஜக - 5
மொத்த எக்சிட் போல்களின் சராசரியையும் பார்த்தால் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கேசிஆர் கட்சிக்கு 67 இடங்கள் கிடைக்கலாம். இது மெஜாரிட்டியான 60 ஐ விட அதிகமாகும். அதேபோல காங்கிரஸ் - சந்திரபாபு நாயுடு கூட்டணிக்கு 39 இடங்கள் கிடைக்கலாம். தெலுங்கானாவில் பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

ஆட்சி அமைப்போம்
அதேபோல மற்ற கட்சிகளுக்கு 8 இடங்கள் வரை கிடைக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணிக்கு 80 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிரான அலை இங்கு நிலவுகிறது. எனவே நாங்கள் ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

வாக்கு வித்தியாசம்
கடந்த சட்டசபைத் தேர்தலில் டிஆர்எஸ் 63 இடங்களை வென்றது. காங்கிரஸ், 21, சந்திரபாபு நாயுடு 15 என வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு விகிதாச்சாரமே இந்த தேர்தலிலும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

11-ம் தேதி தெரியும்
தெலுங்கானாவில் காங்கிரஸ் - நாயுடு கூட்டணி தோல்வியுற்றால், தேசிய அளவில் அவர்கள் திட்டமிட்டு வரும் மாபெரும் கூட்டணியின் கனவுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் 11ம் தேதி அனைத்தும் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications